NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA
    புதிய திரும்பப்பெறும் விதிமுறைகள் அமலானது

    ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 21, 2023
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீப காலங்களில் அரசு வழங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலீடு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டமாக மட்டுமல்லாமல் முதலீட்டுத் தேர்வாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

    இதில் NPS அடுக்கு-1 மற்றும் NPS அடுக்கு-2 என இரண்டு திட்டங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன.

    NPS அடுக்கு-1 திட்டத்தின் கீழ், நமது ஓய்வுக் காலத்திற்குப் பிறகு 60% தொகையை வரிவிலக்குடன் நாம் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால்,NPS அடுக்கு-2 திட்டத்தின் கீழ் பயனாளர்கள் வரிவிலக்கு பெற முடியாது.

    இந்த NPS திட்டங்களில் இருந்து வெளியேறுவதும், ஓய்வூதியம் பெறுவதற்கான வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்வதும் மிகவும் சிக்கலான செயல்முறையாக இருந்து வந்தது. தற்போது அதனை எளிமையாக்க சில மாற்றங்களைக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

    ஓய்வூதியத் திட்டம்

    புதிய திரும்பப்பெறும் விதிமுறைகள்: 

    புதிய விதிமுறைகளின் கீழ், அனைத்து சந்தாதாரர்களும் NPS திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கும், வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்வதற்குமான பொதுவான முன்மொழிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.

    அனைத்து பயனாளர்களுமே திரும்பப்பெறும் படிவத்தையும், நம்முடைய KYC ஆவணங்களையும் இணையதளத்தில் அப்லேடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம், வெளியேறும் நடைமுறையும், வருடாந்திர திட்டத்தை தேர்ந்தெடுக்கும் நடைமுறையும் ஒரே நேரத்தில் நடைபெற்று பயாளர்களுக்கான நேரத்தைக் குறைக்கும்.

    மேலும், இந்த செயல்முறைக்கான காலமானது T4-ல் இருந்து T2-வாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, முன்னர் நான்கு நாட்களில் முடிந்த செயல்முறை இனி இரண்டே நாட்களில் முடிந்துவிடுமாம்.

    இந்த புதிய விதிமுறைகளை ஓய்வூதியத் திட்டங்களின் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA-வே கொண்டு வந்திருக்கிறது. புதிய விதிமுறைகளானது கடந்த ஏப்ரல்-1 முதலே அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓய்வூதியம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஓய்வூதியம்

    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் இந்தியா
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? கடன்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 96 கொரோனா பாதிப்பு கொரோனா
    ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? ஓய்வூதியம்
    மும்பையில் உள்ள ஸ்டோருக்கு ரூ.1 கோடி வாடகை செலுத்திய ஆப்பிள், ஏன்?  ஆப்பிள்
    ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் வாகனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025