NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் புதிய ஹரியானா முதல்வர் நயாப் சைனி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் புதிய ஹரியானா முதல்வர் நயாப் சைனி

    நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் புதிய ஹரியானா முதல்வர் நயாப் சைனி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2024
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று பதவியேற்ற புதிய ஹரியானா அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று வெற்றி பெற்றுள்ளது.

    புதிய ஹரியானா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள நயாப் சிங் சைனி இன்று சட்டசபையின் சிறப்பு அமர்வின் போது நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.

    மக்களவைத் தேர்தலுக்கான சீட் பகிர்வு உடன்பாட்டை எட்டத் தவறியதனால், பாஜக மற்றும் ஜேஜேபி இடையேயான உறவுகள் மோசமடைந்தன.

    அதனால், ஹரியானா முதல்வராக இருந்த எம்எல் கட்டார் தனது அமைச்சரவையையும் ராஜினாமா கடிதத்தையும் நேற்று காலை ஹரியானா ஆளுநரிடம் ஒப்படைத்தார்.

    அதனை தொடர்ந்து, ஹரியானாவின் குருக்ஷேத்ரா மக்களவை எம்பியான நயாப் சிங் சைனி, நேற்று ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து, ஹரியானாவில் ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார்.

    ஹரியானா 

    'மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்': முதல்வர் சைனி

    அதன் பிறகு, புதிய ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று மாலை பதவியேற்றார்.

    புதிய ஹரியானா முதல்வராக நியமிக்கப்பட்ட பிறகு பேசிய முதல்வர் சைனி , "இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, யூனியன் எச்எம் அமித் ஷா மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். சபாநாயகரிடம் நாளை காலை 11 மணிக்கு விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளோம். 48 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்து ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறினார்.

    அதன் படி, இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    பாஜக

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஹரியானா

    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்
    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது இந்தியா
    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா

    பாஜக

    ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அரசின் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்க வாய்ப்பு  பீகார்
    7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு  ஆம் ஆத்மி
    இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம் குடியுரிமை (திருத்த) சட்டம்
    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  சண்டிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025