NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி 
    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி 

    எழுதியவர் Nivetha P
    May 19, 2023
    11:56 am
    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி 
    புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடமாகும். இதன் காரணமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்தியஅரசு முடிவுச்செய்தது. அதன்படி, ராஜபாதை சீரமைப்பு, மத்தியச்செயலகம், பிரதமர் இல்லம்,துணை குடியரசுத்தலைவர் இல்லம்ஆகியவைகளை உள்ளடக்கி புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்ட்ரல்விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக பிரதமர்மோடி கொண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இதன் கட்டுமானப்பணிகள் துவங்கியது. டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனம் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்டியுள்ளது. தொடர்ந்து இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டிடத்தின் வரைபடங்கள் வெளியிடப்பட்டது.

    2/2

    ஜனநாயக பெருமையினை பறைசாற்றும் விதமாக பிரம்மாண்ட அரசியல் சட்ட மண்டபம்

    இந்நிலையில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் வரும் 28ம்தேதி திறக்கப்படுகிறது என்று மத்தியஅரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டிடத்தினை பிரதமர் மோடி அவர்கள் திறந்துவைக்கவுள்ளார். தற்போதுள்ள லோக் சபாக்கட்டிடத்தில் 543பேரும், ராஜ்ய சபாவில் 250பேரும் உட்கார இடவசதியுள்ள நிலையில், கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் ராஜ்யசபா கட்டிடத்தில் 300பேர் உட்காரும் வண்ணம் இடவசதி உள்ளது. மேலும் லோக் சபாவில் கூட்டுக்கூட்டத்தினை நடத்த ஏதுவாக 1,280எம்.பி.க்கள் அமரும் வண்ணம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த புதியக்கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயக பெருமையினை பறைசாற்றும் விதமாக பிரம்மாண்ட அரசியல் சட்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கான அறைகள், விசாலமான வாகன நிறுத்தம், உணவு அருந்தும் பகுதி ஆகியன இடம்பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பிரதமர் மோடி
    மத்திய அரசு

    பிரதமர் மோடி

    மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றம்  காங்கிரஸ்
    ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி  வந்தே பாரத்
    சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா

    மத்திய அரசு

    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு  இந்தியா
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  அதிமுக
    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு! மொபைல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023