NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை
    நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை

    எழுதியவர் Sekar Chinnappan
    May 17, 2025
    07:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ஆவடியில் உள்ள ஒரு மையத்தில் தேர்வின் போது மின் தடை ஏற்பட்டதாகக் கூறி 13 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, நீட் 2025 முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    கடந்த மே 5 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் இளங்கலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா மையத்தில், சுமார் 464 மாணவர்கள் தேர்வுக்கு வந்தனர்.

    கனமழை காரணமாக, தேர்வின் முக்கிய பகுதியான பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 4:15 மணி வரை மின் தடை ஏற்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

    மோசமான சூழல்

    மோசமான சூழலால் கவனச் சிதறல்

    திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், மோசமான வெளிச்சத்திலும், மன அழுத்த சூழ்நிலையிலும் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினர்.

    கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை என்றும், தேசிய தேர்வு முகமைக்கு அளித்த புகார்கள் கவனிக்கப்படாமல் போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரினர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    அதுவரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து, வழக்கை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    நீட் தேர்வு

    ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதற்கு காரணம் NEET தேர்வு: 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம் ஆளுநர் மாளிகை
    இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்! மருத்துவம்
    தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை ராஜஸ்தான்
    தொடரும் மாணவர் தற்கொலைகள்: கோட்டாவில் நுழைவு தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை தற்கொலை

    சென்னை உயர் நீதிமன்றம்

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை வீட்டு வசதி வாரியம்
    "ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்' இளையராஜா
    'இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல': சென்னை உயர் நீதிமன்றம் 'நறு'க்கென கொட்டு இளையராஜா
    ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி ஐபிஎல்

    தமிழகம்

    தமிழகத்தில் ஏப்ரல் 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்
    சென்னை புறநகர் ரயில் சேவையில் முதல் ஏசி ரயில் சேவை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் தொடங்கியது சென்னை
    பாமகவைத் தொடர்ந்து மதிமுகவிலும் உட்கட்சி மோதல்? துரை வைகோ கட்சி பதவியிலிருந்து ராஜினாமா மதிமுக
    தமிழகத்தில் வெப்பநிலை உயர்வு; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை

    தமிழ்நாடு

    2014 தாக்குதல் வழக்கில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு காங்கிரஸ்
    போப் ஆண்டவர் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழக அரசு போப் பிரான்சிஸ்
    UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை யுபிஎஸ்சி
    இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் வானிலை ஆய்வு மையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025