NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / NEET தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை; வேறு என்ன பரிந்துரைகள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    NEET தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை; வேறு என்ன பரிந்துரைகள்?
    மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை

    NEET தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை; வேறு என்ன பரிந்துரைகள்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2024
    03:47 pm

    செய்தி முன்னோட்டம்

    நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது.

    முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக நடைபெறும் இந்த தேர்வில், ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு மற்றும் பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது போன்ற சர்ச்சைகள் எழுந்தன.

    இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில், தேர்வில் நடந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு சார்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழு நீட் தேர்வின் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

    பரிந்துரைகள்

    ஆன்லைன் தேர்வுமுறை இந்த பரிந்துரைகளில் மிக முக்கியமான ஒன்று

    பலகட்ட திட்டமிடுதல் மற்றும் ஆய்வுக்கு பின்னர் சீரமைப்பு குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அவை பின்வருமாறு:

    நீட் நுழைவுத்தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்.

    தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் முறையில் வழங்காமல், சொந்த தேர்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    அரசு பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகளை நடத்துவது.

    ஆன்லைன் முறையில் சாத்தியம் இல்லை என்றால், வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தேர்வர்களுக்கு அனுப்பி, அவர்கள் பதில்களை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் குறிப்பிடலாம்.

    எத்தனை முறை தேர்வில் பங்கேற்பது என்ற தேர்வில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்.

    அதிகம் பேர் நீட் தேர்வை எழுதுவதால் பல நிலைகளில் தேர்வுகளை நடத்தலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு

    சமீபத்திய

    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்
    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல் 2025
    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்

    நீட் தேர்வு

    மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவர் தற்கொலை ராஜஸ்தான்
    முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 'நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை தமிழ்நாடு
    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை அரசு பள்ளி
    ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதற்கு காரணம் NEET தேர்வு: 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம் ஆளுநர் மாளிகை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025