NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: ஐஇடி குண்டுவெடிப்பில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: ஐஇடி குண்டுவெடிப்பில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

    சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: ஐஇடி குண்டுவெடிப்பில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2024
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    சத்தீஸ்கர் தலைநகரமான ராய்ப்பூரில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள சுக்மா மாவட்டத்தில் இருக்கும் சில்கர் மற்றும் தெகல்குடெம் என்னும் பாதுகாப்புப் படையினரின் முகாம்களுக்கு இடையே திம்மாபுரம் கிராமத்திற்கு அருகே இன்று மதியம் 3 மணியளவில் IED குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    சிஆர்பிஎஃப்-ன் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன்(கோப்ரா) 201 பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், இன்று மாலை சுமார் 3 மணியளவில் டிரக் மற்றும் பைக்குகளில் சில்கரில் இருந்து தெகுலகுடம் முகாம்களுக்கு வழக்கமான ரோந்துப் பணிக்கு சென்றிருந்தனர்.

    இந்தியா 

    தேடுதல் பணி நடைபெற்று வருகிறது

    அப்போது நடந்த IED குண்டு வெடிப்பால் அவர்கள் சென்ற டிரக் வெடித்து சிதறியது.

    உயிரிழந்தவர்கள் கான்ஸ்டபிள் சைலேந்திரா (29) மற்றும் வாகன ஓட்டுநர் விஷ்ணு ஆர் (35) என அடையாளம் காணப்பட்டனர்.

    அந்த ராணுவ வீரர்களின் உடல்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு வருவதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக ஏப்ரல் மாதம், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மூன்று பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்தீஸ்கர்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா

    குண்டுவெடிப்பு

    சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தான் கேரள தொடர் குண்டுவெடிப்புக்கு காரணம்- காவலர்கள் உறுதி கேரளா
    'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்  கேரளா
    கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம் கேரளா
    ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதற்கு காரணம் NEET தேர்வு: 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம் ஆளுநர் மாளிகை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025