NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

    எழுதியவர் Nivetha P
    Apr 07, 2023
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் சென்னையை அடுத்து பெருநகரமாக உள்ளது கோவை தான். கோவையை மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கிறது.

    அதில் சேலத்தில் துவங்கி கோவை, கொச்சி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி செல்லும் வழிகளுள் என்.எச்.544 மட்டுமே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த பாதைக்கு மட்டுமே 27கி.மீ., பைபாஸ் ரோடு உள்ளது.

    மற்றொரு தேசிய நெடுஞ்சாலையான என்.எச்.181 பாதையில் எவ்வித விரிவாக்க பணியும் மேற்கொள்ளவில்லை.

    கோவை-மேட்டுப்பாளையம் பகுதி மட்டும் அகலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    மற்ற பாதைகள் மிககுறுகலாக, பைபாஸ் ரோடும் இல்லாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல்கொண்ட ரோடாகவே உள்ளது.

    மூன்றாவது நெடுஞ்சாலையான என்.எச்.,948 மற்றும் 83 ரோடு மிகமோசமான நிலையில் உள்ளது.

    இங்கும் பொள்ளாச்சி-கோவை பகுதி மட்டும் சில வருடங்களுக்கு முன்னர் ரூ.480கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள்

    கோவையை புறக்கணிப்பதாக மக்கள் அதிருப்தி

    இருவழி பாதையாக உள்ள கோவை-சத்தி ரோடு அனைத்து நாட்களிலும் போக்குவரத்து நெரிசலோடு காணப்படுவதோடு விபத்துகளும் அதிகமாக ஏற்படுகிறது.

    இந்த மூன்று ரோடுகளும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் வசம் உள்ள நிலையில் கடந்த 12ஆண்டுகளுக்கு முன்னரே விரிவாக்கப்பணிகளை செய்ய திட்டமிடப்பட்டது.

    மேலும் திண்டுக்கல்-சத்தி வரை 10ஊர்களில் பைபாஸ் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்பும் நடத்தப்பட்டது.

    இதனைதொடர்ந்து குறும்பாளையம்-சத்தி 98கிமீ ரோட்டினை 4வழிபாதையாக மாற்றவும், 5ஊர்களுக்கு 3பைபாஸ் சாலையையும் ரூ.1,200கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டது.

    இதற்காக 731ஏக்கர் நிலத்தினை கோவை,ஈரோடு மாவட்டங்களில் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

    ஆனால் இப்பணியும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

    எந்தவொரு திட்டத்தினை அரசு அறிவித்தாலும் கோவையை மட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை புறக்கணிப்பது தெளிவாக தெரிகிறது என்று அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கோவை

    ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம் தமிழ்நாடு செய்தி
    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது காவல்துறை
    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு சென்னை
    'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண் ஈஷா யோகா

    தமிழ்நாடு

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் மனித உரிமைகள் ஆணையம்
    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் சென்னை
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025