NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி கோவில் லட்டு சர்ச்சையின் பின்னணியில் நெய் பிராண்ட் மாற்றம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி கோவில் லட்டு சர்ச்சையின் பின்னணியில் நெய் பிராண்ட் மாற்றம்?
    லட்டு சர்ச்சையின் பின்னணியில் நெய் பிராண்டில் மாற்றம்?

    திருப்பதி கோவில் லட்டு சர்ச்சையின் பின்னணியில் நெய் பிராண்ட் மாற்றம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 20, 2024
    09:53 am

    செய்தி முன்னோட்டம்

    திருப்பதி லட்டுகளில் தரம் தாழ்ந்த பொருட்களும், பசு நெய் அல்லாத பொருட்களும் சேர்க்கப்பட்டது என லேப் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை உண்டானதில், தற்போது பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் பசும்பாலின் நெய் அல்லாத பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்ததாக ஆய்வக அறிக்கையை மேற்கோள் காட்டி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறியது, கடந்த ஆண்டு புகழ்பெற்ற நந்தினி நெய் சப்ளை நிறுத்தப்பட்டது உடன் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தை தூண்டியுள்ளது.

    நெய் 

    திருப்பதி லட்டுவில் முக்கிய மூலப்பொருள் நெய்

    நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் ஸ்ரீவாரி லட்டுகளின் சுவையை தீர்மானிப்பதில் நெய்யின் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வாரியம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நெய் சப்ளை செய்வதற்கான டெண்டர்களை பெற்று, ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கிலோ நெய்யை கொள்முதல் செய்கிறது.

    நந்தினி நெய்

    நந்தினி நெய் ஏன் நிறுத்தப்பட்டது?

    கடந்த ஆண்டு, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசாங்கம், கர்நாடகா பால் கூட்டமைப்பிலிருந்து (KMF) லட்டுகளுக்கு நந்தினி நெய்யை வாங்குவதை, ஏறக்குறைய 15 வருட கூட்டணிக்கு பின்னர், விலை நிர்ணயத்தினை காரணம் காட்டி நிறுத்தியது.

    கர்நாடகா பால் கூட்டமைப்பு, பால் விலை உயர்வால் அதன் நெய்யை போட்டி விகிதத்தில் வழங்குவதைத் தடுத்ததால் ஏலப் பணியைத் தவிர்த்தது.

    நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

    எனவே, குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

    "இனிமேலும் லட்டுகள் ஒரே மாதிரியாக இருக்காது. நந்தினியை விட எந்த பிராண்ட் குறைந்த விலையில் நெய்யை வழங்கினாலும், தரம் பாதிக்கப்படும்"என KMF தலைவர் நாயக் அப்போது தெரிவித்தார்.

    அரசியல்

    அரசியல் சர்ச்சையை தூண்டிய நெய் விவகாரம்

    திருப்பதி கோயில் விவகாரங்களில் அரசியல் தலையீடு செய்வதாக பாஜக குற்றம் சாட்டியது.

    "சமரசம் செய்யப்பட்ட லட்டு தரம்" மற்றும் மற்றொரு பிராண்டில் இருந்து நெய்யை பெற கோவில் வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

    இருப்பினும், லட்டுகளின் தரத்தை மேம்படுத்த சந்திரபாபு நாயுடுவின் உத்தரவுக்குப் பிறகு, KMF நந்தினி நெய்யை ஆகஸ்ட் முதல் TTDக்கு வழங்கத்தொடங்கியது.

    திருப்பதியில் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. லட்டு தயாரிக்க, தினமும் 400-500 கிலோ நெய், 750 கிலோ முந்திரி, 500 கிலோ திராட்சை, 200 கிலோ ஏலக்காய் தேவைப்படும்.

    சமீபத்திய சர்ச்சையைத்தொடர்ந்து, தரமான நெய் கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆலோசனை வழங்க TTD ஒரு குழுவை அமைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    ஆந்திரா
    சந்திரபாபு நாயுடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    திருப்பதி

    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    திருப்பதியில் ஓராண்டிற்கு பிறகு ரூ.2 கோடியாக குறைந்த உண்டியல் வருவாய் இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவிற்கு கூடுதல் வசதிகள் கொண்ட புது செயலி அறிமுகம் இந்தியா

    ஆந்திரா

    பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது தமிழக காவல்துறை
    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா
    ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு அமெரிக்கா
    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  சந்திரபாபு நாயுடு

    சந்திரபாபு நாயுடு

    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  ஆந்திரா
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? காங்கிரஸ்
    ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்த விஜய் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025