NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள் 
    ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள்

    ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள் 

    எழுதியவர் Nivetha P
    Dec 28, 2023
    07:40 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஆங்காங்கே மதம் சார்ந்த பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

    இதற்கு தீர்வுக்காண மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, ஒருசில மதத்தை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து மற்றொரு மதத்தை சேர்ந்த மக்களோடு இணைந்து மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் தாமாகவே முன்வந்து ஈடுபடுகிறார்கள்.

    இது போன்ற நிகழ்வுகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டு தான் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதாக கூறப்படுகிறது.

    அதன்படி, இந்து கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்துக்கள் கோயில் கமிட்டியில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தோர் பொறுப்பில் உள்ளது போன்ற நிகழ்வுகள் இதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது.

    மதம் 

    கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வு 

    மேலும், பண்டிகை காலங்களில் சாதி-மதம் என அனைத்தையும் கடந்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவுப்பரிமாறி உண்ணும் சம்பவங்களும் தமிழ்நாட்டில் அடிக்கடி நடப்பதும் வழக்கம்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் மதநல்லிணக்கத்தினை போற்றும் வகையில் இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுகிறார்கள், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜைப்பொருட்கள் வாங்கி கொடுப்பதோடு, அன்னதானமும் செய்து வருகின்றனர்.

    சுமார் 8 ஆண்டுகளாக இந்த இளைஞர்கள் இதனை செய்து வரும் நிலையில், 9ம்-ஆண்டான இந்தாண்டும் இவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜைப்பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

    திமுக பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் கவுன்சிலரான அஸ்லாம் தலைமையில் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கொட்டாவூர் கிராம ஐயப்பன் கோயிலில் நேற்று(டிச.,27)மாலை சிறப்பு பஜனை நடத்தப்பட்டு பூஜைப்பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சிறப்பு பூஜை 

    கிருஷ்ணகிரி அருகே ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள் #DinakaranNews #Krishnagiri #LordAyyappan pic.twitter.com/DFeXYeigqw

    — Dinakaran (@DinakaranNews) December 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சபரிமலை
    பண்டிகை
    மதம்
    திருவிழா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  கேரளா
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  மாற்றுத்திறனாளி
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் திருப்பதி
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? கம்யூனிஸ்ட்

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு

    மதம்

    பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை பெங்களூர்
    நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்  தமிழ்நாடு

    திருவிழா

    புத்த பூர்ணிமா: இந்த புத்த பண்டிகை நாளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பண்டிகை
    பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை  திண்டுக்கல்
    தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்  தமிழ்நாடு
    கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025