NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு
    மும்பையில் தீவிரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு

    மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 28, 2024
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவுத்துறையின் அலெர்ட்டை அடுத்து, மும்பை போலீசார், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பரபரப்பான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    "நெருக்கடியான பகுதிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஒத்திகையை நடத்துமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து துணை போலீஸ் கமிஷனர்களும் அந்தந்த அதிகார வரம்புகளில் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்." என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

    மும்பையில் உள்ள கோவில்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரண்டு பிரபலமான மதத் தளங்களைக் கொண்ட க்ராஃபோர்ட் மார்க்கெட் பகுதியில் ஒரு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    பண்டிகை காலம்

    பண்டிகை காலம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு

    இது தொடர்பான கூடுத விபரங்களை காவல்துறை வெளியிடவில்லை. எனினும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்குத் தயாராகும் ஒரு சாதாரண நடவடிக்கையே இந்த பாதுகாப்பு அதிகரிப்பு என்று அதிகாரிகள் கூறினர்.

    துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளி போன்ற பெரிய கொண்டாட்டங்களுக்கு மும்பை தயாராக உள்ளது.

    மேலும், நவம்பரில் எதிர்பார்க்கப்படும் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலுக்கும் மும்பை நகரம் தயாராகி வருகிறது.

    "வரவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் சட்டசபை தேர்தல்களில், நாங்கள் கிராஃபோர்ட் மார்க்கெட் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்தி வருகிறோம்," என்று அதிகாரி கூறினார்.

    இதற்கிடையே, மாட்டுங்காவில், காலையில் போலீஸ் சோதனைக்குப் பிறகு ஒரு கோயில் பக்தர்களுக்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    தீவிரவாதம்
    மத்திய அரசு
    காவல்துறை

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    மும்பை

    'இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி...': மும்பை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்
    ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல்; மும்பை பெண் எதிர்கொண்ட பயங்கர சம்பவம் இந்தியா
    மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சர்ச்சை  இந்தியா
    இன்று பலியிடப்பட்ட ஆட்டின் மீது 'ராம்' என்று எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை  இந்தியா

    தீவிரவாதம்

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது? இஸ்ரேல்
    பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள் இஸ்ரேல்
    இஸ்ரேலின் 'அயன் டோம்' அமைப்பை ஹமாஸ் எவ்வாறு ஊடுருவியது?  இஸ்ரேல்
    ஜெர்மனியப் பெண்ணின் உடலை மானபங்கப்படுத்திய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் வைரல் செய்தி

    மத்திய அரசு

    கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு; காரணம் என்ன? மெட்ரோ
    டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு டெலிகிராம்
    ஆதார் அட்டை முதல் போலி அழைப்புகள் வரை; செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள் ஆதார் புதுப்பிப்பு
    தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது! தமிழ்நாடு

    காவல்துறை

    கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு  நியூயார்க்
    பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரின் தந்தைக்கு விசாரணை குழு சம்மன் பாலியல் தொல்லை
    ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம்  கர்நாடகா
    சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025