NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கட்டுப்பாட்டை இழந்த இந்தியக் கடற்படை படகு, படகில் லைப் ஜாக்கெட் இல்லை: மும்பை படகு விபத்திற்கான காரணிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கட்டுப்பாட்டை இழந்த இந்தியக் கடற்படை படகு, படகில் லைப் ஜாக்கெட் இல்லை: மும்பை படகு விபத்திற்கான காரணிகள்
    கவிழ்ந்து கிடைக்கும் சுற்றுலா படகு

    கட்டுப்பாட்டை இழந்த இந்தியக் கடற்படை படகு, படகில் லைப் ஜாக்கெட் இல்லை: மும்பை படகு விபத்திற்கான காரணிகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 19, 2024
    08:38 am

    செய்தி முன்னோட்டம்

    மும்பை கடற்கரையில் கடற்படையின் ஸ்பீட் போட் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தனியார் சுற்றுலா படகில் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விபத்திற்கான முதற்கட்ட விசாரணையில் கடற்படை படகில் பயணம் செய்தவர்களுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தினர்.

    அதனால் உயிர்சேதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா தீவுக்கு 110 பயணிகளுடன் சென்ற படகு, கடற்படையின் விரைவுப் படகுடன் மோதியதில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் இதுவரை 115 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    படகு விபத்தில் உயிர் பிழைத்தவரின் புகாரின் அடிப்படையில் கடற்படை விரைவுப் படகு ஓட்டுநர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    அறிக்கை

    கடற்படையின் அறிக்கை தெரிவிப்பது என்ன?

    இந்திய கடற்படை அறிக்கையின்படி, கடற்படையின் ஸ்பீட் போட் ஒன்று என்ஜின் சோதனையின் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா படகு மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது.

    வேகப் படகு இயந்திர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு திடமான ஊதப்பட்ட படகு (RIB) என்றும், இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

    இறந்தவர்களில் கடற்படை படகில் இருந்த இருவர் உட்பட 12 பொதுமக்களும், இந்திய கடற்படை அதிகாரி ஒருவரும் அடங்குவர்.

    வேகப் படகில் இருந்த ஒரு கடற்படை அதிகாரி மற்றும் அசல் உபகரண உற்பத்தியாளரின் (OEM) இரண்டு ஊழியர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.

    சுற்றுலா படகில் இருந்த 115 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #VIDEO | Indian Navy's speed boat rams into a passenger boat with over 100 passengers onboard near Gateway of India in Mumbai. 13 people died in the incident. #Mumbai #BoatCapsized #gatewayofindia #ferryboat #ferryboataccident #MumbaiFerryAccident #boataccident #IndianNavy… pic.twitter.com/j3tsTO5M6g

    — News9 (@News9Tweets) December 19, 2024

    நிவாரணம்

    நிவாரணம் அறிவித்த மத்திய அரசும், மாநில அரசும்

    மும்பை படகு விபத்தில் இதுவரை 101 பேர் மீட்கப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அறிவித்துள்ளார்.

    அதேபோல்,விபத்து குறித்து அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடியும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    கடற்கரை
    கடற்படை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மும்பை

    ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு இந்தியா
    ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை கல்லூரி
    மாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை  காற்று மாசுபாடு
    ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 'சங்கீத்' விழாவில் பாடுவதற்காக மும்பை வந்திறங்கிய பாப் பாடகர் ஆனந்த் அம்பானி

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025