NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
    மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து

    மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 18, 2024
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு மும்பையில் பிரபலமான கேட்வே ஆஃப் இந்தியா அருகே கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.

    நீல்கமல் என்ற படகு எலிபெண்டா குகைகளில் இருந்து கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    66 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 12 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

    லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டு வேறு படகுக்கு மாற்றப்படுவதை காட்சியில் இருந்து வீடியோ காட்சிகள் காட்டுகிறது.

    கடற்படை மற்றும் கடலோர காவல்படை தலைமையில் பெரிய அளவிலான மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    விவரங்கள்

    சிறிய படகு வேகமாக மோதியதில் விபத்து

    இன்று மாலை மாலை சுமார் 4 மணியளவில் படகு எலிபென்டா தீவில் இருந்து திரும்பி கொண்டிருந்த நேரத்தில், அதன் மீது சிறிய அதிவேகப்படகு ஒன்று மோதியுள்ளது.

    இதில், சுற்றுலாப்பயணிகள் சென்ற படகு மூழ்க ஆரம்பித்தது. ஆபத்தை உணர்ந்த படகு ஊழியர்கள், அவசர உதவி கோரி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே விரைந்து வந்த கடலோர காவல்படை மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். மீட்புப்பணியில் 11 கடற்படை படகுகள், மூன்று மரைன் போலீஸ் கப்பல்கள் மற்றும் ஒரு கடலோர காவல்படை படகுகள் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    கூடுதலாக, நான்கு ஹெலிகாப்டர்கள், ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் வளங்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இந்த நடவடிக்கைக்கு உதவுகிறார்கள்.

    உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    விபத்து

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    மும்பை

    மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி விபத்து
    ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு இந்தியா
    ஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை கல்லூரி
    மாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை  காற்று மாசுபாடு

    விபத்து

    கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன் ஜெகன் மோகன் ரெட்டி
    புனே போர்ஷே விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு புனே
    குஜராத்தின் சூரத்தில் பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்  குஜராத்
    திருநெல்வேலி விபத்து: கார் மோதியதில் 20 அடி உயரம் காற்றில் தூக்கி எறியப்பட்ட பெண் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025