NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி
    இந்தியா

    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி

    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி
    எழுதியவர் Sindhuja SM
    Feb 04, 2023, 03:46 pm 0 நிமிட வாசிப்பு
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால்  மூன்று மாத குழந்தை பலி
    அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக இன்று எடுத்துச் செல்லப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியால் 51 முறை குத்தப்பட்டதால், அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. கம்பியால் குத்தப்பட்டு 15 நாட்களுக்கு பிறகு மூச்சு திணறலால் குழந்தை இறந்துள்ளது. ஷாஹோல் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக இன்று(பிப் 4) எடுத்துச் செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தபோது, ​​15 நாட்களுக்கு முன்பு கண்மூடித்தனமான நம்பிக்கையினால் ஏற்பட்ட விளைவுகளை கண்டறிந்தனர். மேலும், குழந்தையின் நிமோனியாவுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது" என்று ஷாஹோல் கலெக்டர் வந்தனா வைத் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற வழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன: டாக்டர் ஹிதேஷ்

    "உள்ளூர் அங்கன்வாடி பணியாளர் ஒருவர் குழந்தையின் தாயிடம் அறிவுரை கூறி, குழந்தையை சூடான கம்பியால் குத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்" என்று வந்தனா வைத் மேலும் கூறினார். மத்தியப் பிரதேசத்தின் பல பழங்குடியின பகுதிகளில், நிமோனியாவுக்கு "சிகிச்சையளிக்க" சூடான இரும்பு கம்பியால் குத்துவது வழக்கம். மருத்துவரும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான டாக்டர் விக்ராந்த் பூரியா, "கம்பியால் குத்தப்படுவது மரணத்திற்கு வழிவகுக்கும். குத்தப்பட்ட இடங்களில் நோய்த்தொற்று கிருமிகளால் இன்பெக்ஸன் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார். "இதுபோன்ற வழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. அந்தப் பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹிதேஷ் வாஜ்பாய் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    இந்தியா

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்

    மத்திய பிரதேசம்

    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி இந்தியா
    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சென்னை
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் ஆப்பிரிக்கா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023