NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால்  மூன்று மாத குழந்தை பலி
    அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக இன்று எடுத்துச் செல்லப்படுகிறது.

    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 04, 2023
    03:46 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியால் 51 முறை குத்தப்பட்டதால், அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

    கம்பியால் குத்தப்பட்டு 15 நாட்களுக்கு பிறகு மூச்சு திணறலால் குழந்தை இறந்துள்ளது.

    ஷாஹோல் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக இன்று(பிப் 4) எடுத்துச் செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    "மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தபோது, ​​15 நாட்களுக்கு முன்பு கண்மூடித்தனமான நம்பிக்கையினால் ஏற்பட்ட விளைவுகளை கண்டறிந்தனர். மேலும், குழந்தையின் நிமோனியாவுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது" என்று ஷாஹோல் கலெக்டர் வந்தனா வைத் தெரிவித்துள்ளார்.

    மத்திய பிரதேசம்

    இதுபோன்ற வழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன: டாக்டர் ஹிதேஷ்

    "உள்ளூர் அங்கன்வாடி பணியாளர் ஒருவர் குழந்தையின் தாயிடம் அறிவுரை கூறி, குழந்தையை சூடான கம்பியால் குத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்" என்று வந்தனா வைத் மேலும் கூறினார்.

    மத்தியப் பிரதேசத்தின் பல பழங்குடியின பகுதிகளில், நிமோனியாவுக்கு "சிகிச்சையளிக்க" சூடான இரும்பு கம்பியால் குத்துவது வழக்கம்.

    மருத்துவரும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான டாக்டர் விக்ராந்த் பூரியா, "கம்பியால் குத்தப்படுவது மரணத்திற்கு வழிவகுக்கும். குத்தப்பட்ட இடங்களில் நோய்த்தொற்று கிருமிகளால் இன்பெக்ஸன் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.

    "இதுபோன்ற வழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. அந்தப் பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹிதேஷ் வாஜ்பாய் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து விமானப்படை

    இந்தியா

    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; தங்கம் வெள்ளி விலை
    எச்சரிக்கை! இன்று முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது வாட்ஸ்அப்
    யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்! பான் கார்டு
    யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்திய 5வது பெரிய நாடாக உள்ளது; பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025