NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமநாதபுரம் மசூதியில் தினசரி 8 மணிநேரமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமநாதபுரம் மசூதியில் தினசரி 8 மணிநேரமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சி
    (மாதிரி புகைப்படம்)

    ராமநாதபுரம் மசூதியில் தினசரி 8 மணிநேரமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 24, 2025
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்லாமியர்களின் நோன்பு விரதத்தின் முக்கிய உணவாகவும், பானமாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட உணவாகவும் கருதப்படுவது நோன்பு கஞ்சி.

    இந்த புனித ரமலான் மாதம் முழுவதும், சூரிய உதயம் தொடங்கி, அஸ்தமனம் வரை எந்த உணவும், நீரும் அருந்தாமல் பக்தியுடனும், சுய ஒழுக்கத்துடன் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமிய சகோதரர்களுக்காக பள்ளிவாசலில் நோன்பு காஞ்சி தயார் செய்து தருவது மரபு.

    இஸ்லாமியர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்து, நோன்பு கஞ்சியை முதலில் சாப்பிடுவது வழக்கம்.

    அந்த வகையில் ராமநாதபுரம் பாம்பனில் உள்ள மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசலில், தினசரி இஸ்லாமியர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சியை வழங்கி வருகின்றனர். இதை தயாரிக்க 8 மணி நேரம் ஆகிறது என நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.

    செய்முறை

    நோன்பு கஞ்சி செய்முறை

    நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணி காலை 9 மணிக்கு துவங்குகிறது.

    5 முதல் 10 கிலோ வரை தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட், கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளை நறுக்கி சேர்த்து, காலை 10 மணியளவில் அடுப்பில் சமைக்க துவங்குகிறார்கள்.

    சுமார் 1000 நபர்கள் சாப்பிடும் அளவில் பெரிய சமையல் பாத்திரத்தில் எண்ணெய், பட்டை, கிராம்பு, கடுகு, உளுந்தம்பருப்பு, மற்றும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

    அதோடு, 5 மணி நேரம் ஊறவைத்த அரிசி, பருப்பு, வெந்தயம் சேர்த்து, ஒரு மணிநேரம் சமைத்து. கடைசியாக, தேங்காய் பால் சேர்த்து, 2 மணிநேரம் தம் கட்டிநிலையில் வைத்தால், நோன்பு கஞ்சி தயார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராமநாதபுரம்
    இஸ்லாம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு தமிழ்நாடு செய்தி
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது தமிழ்நாடு
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை

    இஸ்லாம்

    நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து   பண்டிகை
    'இந்திய மதங்களில் தனித்த பெருமையை கொண்டது இஸ்லாம்' : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியா
    மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள் தமிழ்நாடு
    இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025