NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை

    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை

    எழுதியவர் Nivetha P
    Feb 16, 2023
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி ரெட்டிச்சாவடி அடுத்துள்ள அழிச்சி பட்டு கிராமத்தை சேர்ந்த மீனா தனது குடும்பத்துடன் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாத்துகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் வழக்கம் போல் இவர் பாகூர் சேலியமேடு வயல்வெளியில் வாத்துக்களை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.

    வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த வாத்துக்கள் சில மணி நேரங்களுக்கு பின்னர் ஒன்றன் ஒன்றாக பலியாக துவங்கியுள்ளது.

    இதனை பார்த்து அலறி துடித்த மீனா தனது உதவிக்காக அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

    அதனையடுத்து அருகில் இருந்த விவசாயிகள் ஓடிவந்து வாத்துக்களை பார்த்தனர். பின்னர் அவர்களுக்கு தெரிந்த வைத்தியங்கள் செய்து முயற்சிகளை மேற்கொண்டனர்.

    தீவிர விசாரணை

    புதுச்சேரி கால்நடை துறைக்கு இறந்த வாத்துக்கள் அனுப்பி வைப்பு

    எனினும், அதற்குள் 400 வாத்துக்கள் அடுத்தடுத்து மடிந்து சரிந்து விழுந்தது.

    செய்வதறியாது நின்று அப்பகுதி மக்கள் பின்னர் பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆய்வினை மேற்கொண்டனர்.

    அதன் பின்னர் 400க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்துவிட்டது என்பதனை உறுதி செய்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை புதுச்சேரி கால்நடை துறைக்கு தகவல் அளித்தனர்.

    மேலும் இறந்த வாத்துகளை ஆய்விற்காக அங்கு அனுப்பியும் வைத்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களிடம் காவல் துறையினர் தங்களது விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    புதுச்சேரி

    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025