NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா
    அடுத்த செய்திக் கட்டுரை
    "மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா
    நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டது என மக்களவையில் அமித்ஷா பேசியுள்ளார்

    "மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 09, 2023
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை, 12 மணியளவில் ராகுல் காந்தி மக்களவைக்கு வந்தார்.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மத்திய அரசை நோக்கி குற்றசாட்டுகளை தொடுத்தார் ராகுல் காந்தி.

    மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை தாக்கி பேசிய ராகுல் காந்தி, "நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை. பிரதமர் மோடி மணிப்பூரை ஹிந்துஸ்தானின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூரை பிரதமர் இரண்டாக பிரித்துவிட்டார்" என்று கூறினார்.

    மேலும்,"மணிப்பூரில் பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள். மணிப்பூர் மக்களைக் கொன்றுவிட்டீர்கள். இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, நீங்கள் துரோகிகள்" என்று பாஜகவை சாடினார்.

    card 2

    "நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டது": அமித் ஷா 

    ராகுல் காந்தி தனது உரையை முடித்தபிறகு, மாலை 5-மணி அளவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது உரையை தொடங்கினார்.

    நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை காட்டும் என தொடங்கிய அமித்ஷா,"சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமான பிரதமர் என்றால் அது நரேந்திர மோடிதான். நான் இதைச் சொல்லவில்லை, உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட ஏராளமான சர்வேகள் அப்படித்தான் சொல்கின்றன" என பிரதமரை புகழ்ந்தார்.

    "இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதால், அந்த (காங்கிரஸ்) அரசு செய்த பணிகளை நான் குறிப்பிட விரும்புகிறேன்." என்று தற்போது மக்களவையில் பேசி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமித்ஷா
    மக்களவை
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமித்ஷா

    அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா இந்தியா
    அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? - முதல்வர் மு.க.ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா இந்தியா
    அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி  எடப்பாடி கே பழனிசாமி

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    பிரதமர் மோடி

    'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம்  இந்தியா
    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  மோடி
    பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி  மோடி
    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025