NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாட்னா: பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தையின் சடலம் கண்டெடுப்பு; பள்ளிவளாகம் தீவைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாட்னா: பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தையின் சடலம் கண்டெடுப்பு; பள்ளிவளாகம் தீவைப்பு 
    பள்ளியின் டிட்ச்சில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது pc: இந்தியா டுடே

    பாட்னா: பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தையின் சடலம் கண்டெடுப்பு; பள்ளிவளாகம் தீவைப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 17, 2024
    01:36 pm

    செய்தி முன்னோட்டம்

    பாட்னாவில் காணாவில்லை என தேடப்பட்ட 3 வயது சிறுவன், அவனது பள்ளியின் வாய்க்காலில்(ditch) சடலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    சிறுவன் இறந்து, அவனது சடலம் மறைத்து வைக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், ஆத்திரமடைந்த அவனது குடும்பத்தினர் பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

    அதோடு, சாலைகளை மறித்து, வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தெருக்களில் டயர்களை எரித்த சம்பவமும் நடந்தேறியது.

    பள்ளி முடிந்தும் வீடு திரும்பாததால், குழந்தை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் இருப்பிடம் குறித்த கேள்விகளை பள்ளி அதிகாரிகள் தவிர்த்துவிட்டதால், குடும்பத்தினர் தாங்களே வளாகத்தில் தேடிய போது, சிறுவனின் உடலைக் கண்டுபிடித்தனர்.

    விசாரணை

    காவல்துறை விசாரணை முடக்கம்

    இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''குழந்தை கடத்தல் வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குழந்தை பள்ளிக்குள் சென்றது, வெளியே வராதது தெரியவந்தது. பள்ளி சிறுவர்களிடம் செய்த விசாரணையில், இரு பள்ளி குழந்தைகள், காணாமல் போன சிறுவனின் உடல் பள்ளி அறையின் கழிவுநீரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டதாக ஒப்புக்கொண்டனர்" என்றார்.

    "மேலும், குற்றவியல் நோக்கத்தின் அறிகுறிகளால் இதை கொலை வழக்காக கருதுகிறோம். நாங்கள் மூன்று பேரை கைது செய்துள்ளோம். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

    "சிறுவன் ஸ்லைடரில் இருந்து விழுந்து, தலையில் காயம் அடைந்து மயக்கமடைந்தான்" என்று ஆரம்ப கண்டுபிடிப்புகளை அதிகாரி பகிர்ந்துகொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிகள்

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025