NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள் 
    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள்

    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள் 

    எழுதியவர் Nivetha P
    May 22, 2023
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக நிதி அமைச்சர் பதவியிலிருந்து பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவரின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் மிசா பாண்டியன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயராகவும், திமுக முன்னாள் அவைத்தலைவராகவும் இருந்தவர் தான் இந்த மிசா பாண்டியன்.

    மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்த இவர், பின்னர் இடையில் அதிமுக கட்சியில் இணைந்தார்.

    மீண்டும் அங்கிருந்து திமுக கட்சிக்கே தாவிய இவர் முதலில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளராக இருந்துள்ள நிலையில், தற்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக உள்ளார்.

    இந்நிலையில், மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் இவரது மனைவி பாண்டி செல்விக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மண்டல தலைவர் பதவியினை வாங்கி கொடுத்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    மிசா 

    மிசா பாண்டியன் மீது வார்டு கவுன்சிலர் நூர்ஜகான் புகார் 

    இதனைத்தொடர்ந்து தனது மனைவி மண்டல தலைவர் பதவியில் உள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக மிசா பாண்டியன் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக்கு சென்று வந்துள்ளார்.

    அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார், இவரின் தலையீடு காரணமாக திமுக கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்.

    மேலும், மண்டல மற்றும் மாநகராட்சி கூட்டங்களில் வார்டு பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினால் அவர்களை இவர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    குறிப்பாக, 54வது வார்டினை சேர்ந்த கவுன்சிலர் நூர்ஜகான் வார்டு பிரச்சனை குறித்து பேசுகையில், அவரை இவர் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து நூர்ஜகான் திமுக மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.

    இதுதொடர்பாக நூர்ஜகானும், மிசா பாண்டியனும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

    இந்த விவகாரம் வெளிவந்தநிலையில், மிசா பாண்டியனை திமுக'விலிருந்து இடைநீக்கம் செய்து கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    மதுரை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திமுக

    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023

    மதுரை

    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தமிழ்நாடு
    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி விமான சேவைகள்
    மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025