NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி

    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி

    எழுதியவர் Nivetha P
    Apr 05, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில், பாலியல் குற்ற வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், தமிழகத்தில் 32 மகளிர் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதிகள் தலைமையிலும், 33 கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள் குற்றவியல் நடுவர் தரத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

    நீதிபதிக்கான காலி பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் அவை விரைந்து நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து எம்.எச்.ஜவாஹிருல்லா, குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் 16 மாவட்டங்கள் மட்டுமே உள்ளது.

    14% வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.

    அமைச்சர் ரகுபதி விளக்கம்

    கூடுதல் போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்

    வழக்கு மீதான விசாரணை தாமதமாவதால் குற்றவாளிகளுக்கு சாதகமாக அது அமைந்துவிடுகிறது என்றும் கூறியுள்ளார் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா.

    மேலும் அவர், கூடுதல் போக்ஸோ நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்த ரகுபதி, போக்ஸோ வழக்குகள் அதிகளவில் பதிவாகும் மாவட்டங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    100 வழக்குகளுக்கு கீழ் உள்ள மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 50% விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டில் 1,820 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 753 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் 2022ம் ஆண்டில் 1,860 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 842 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    போக்ஸோ குற்ற வழக்குகளில் இருந்து யாரும் அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சட்டமன்றம்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    தமிழ்நாடு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது காவல்துறை
    வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு வேங்கை வயல்

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025