NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி
    அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி

    அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி

    எழுதியவர் Nivetha P
    Sep 07, 2023
    07:51 pm

    செய்தி முன்னோட்டம்

    அமைச்சர் பொன்முடியை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இவ்வழக்கின் விசாரணையினை கையில் எடுத்தார்.

    அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று(செப்.,7)ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றியது தொடர்பான உயர்நீதிமன்ற நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறப்பட்டுள்ளதால் இவ்வழக்கில் உயர்நீதிமன்ற பதிவுத்துறையினை இணைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

    மேலும் அவர், தாமாக முன்வந்து ஒரு வழக்கினை விசாரணைக்கு எடுக்கையில் லஞ்சஒழிப்புத்துறையின் விளக்கத்தினை கேட்டிருக்கவேண்டும் என்றும், மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் இருப்பதனை கருத்தில் கொள்ளாமல் விசாரணையினை துவங்கியதாகவும் குறிப்பிட்டார்.

    விசாரணை 

    அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் ஒரே கருத்தினை கூறியதாக தகவல் 

    இதனை தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதனை தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்றும்,

    அதனால் விசாரணையினை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். இதே கருத்தினை அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் வலியுறுத்தினார் என்று தெரிகிறது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கினை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? என்று ஆலோசித்து அடுத்த வாரம் முடிவு எடுப்பதாக கூறி வழக்கின் விசாரணையினை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    விழுப்புரம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சென்னை உயர் நீதிமன்றம்

    மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்; 15 கோடி ருபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு கோலிவுட்
    கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு கோலிவுட்
    தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை  அதிமுக

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025