NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி
    அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி
    இந்தியா

    அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி

    எழுதியவர் Nivetha P
    September 07, 2023 | 07:51 pm 0 நிமிட வாசிப்பு
    அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி
    அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி

    அமைச்சர் பொன்முடியை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இவ்வழக்கின் விசாரணையினை கையில் எடுத்தார். அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று(செப்.,7)ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றியது தொடர்பான உயர்நீதிமன்ற நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறப்பட்டுள்ளதால் இவ்வழக்கில் உயர்நீதிமன்ற பதிவுத்துறையினை இணைத்திருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர், தாமாக முன்வந்து ஒரு வழக்கினை விசாரணைக்கு எடுக்கையில் லஞ்சஒழிப்புத்துறையின் விளக்கத்தினை கேட்டிருக்கவேண்டும் என்றும், மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் இருப்பதனை கருத்தில் கொள்ளாமல் விசாரணையினை துவங்கியதாகவும் குறிப்பிட்டார்.

    அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் ஒரே கருத்தினை கூறியதாக தகவல் 

    இதனை தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதனை தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்றும், அதனால் விசாரணையினை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். இதே கருத்தினை அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் வலியுறுத்தினார் என்று தெரிகிறது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கினை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? என்று ஆலோசித்து அடுத்த வாரம் முடிவு எடுப்பதாக கூறி வழக்கின் விசாரணையினை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை உயர் நீதிமன்றம்
    விழுப்புரம்

    சென்னை உயர் நீதிமன்றம்

    'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம் தமிழக அரசு
    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் செந்தில் பாலாஜி
    இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஈரோடு

    விழுப்புரம்

    'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல் இஸ்ரோ
    விழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம்  புதுச்சேரி
    அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்  எடப்பாடி கே பழனிசாமி
    சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு  தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023