NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா
    கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா

    கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா

    எழுதியவர் Nivetha P
    Mar 28, 2023
    06:51 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கொட்டாங்குளக்கரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இரண்டாம் பகுதியில் ஸ்ரீ கொட்டன்குளங்கரா தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா நடைபெறும்.

    இதில் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி பெண்கள் அலங்காரம் செய்து கொண்டு ஊர்வலமாக செல்வார்கள்.

    ஆனால் உண்மையில் அது பெண்கள் அல்ல ஆண்கள். கேரள மாநிலம் முழுவதிலும் இருந்து ஆண்கள் சாதி, மதம் போன்ற எவ்வித பாகுபாடையும் பாராமல் இக்கோயிலுக்கு வந்து புடவை அணிந்து, பூ சூடி, ஒப்பனைகள் செய்துகொண்டு தனித்துவமான சடங்கில் பங்கேற்கிறார்கள்.

    கேரளாவின் ஐந்து முகம் கொண்ட தெய்வீக சமயவிளக்குகளை ஏற்றி கோயிலை சுற்றி வருகிறார்கள்.

    இது இக்கோயிலின் சிறப்பு வேண்டுதலாக கருதப்படுகிறது.

    இவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது.

    19 நாட்கள் திருவிழா

    குருத்தோலை பந்தல் அமைக்கப்பட்டு தெய்வ சிலை வைத்து வழிபாடு

    கேரளாவில் நடைபெறும் இத்திருவிழா 19 நாட்கள் நடைபெறும் நிலையில் கடைசி 2 நாட்கள் மாலையில் துவங்கி விடியும் வரை இந்த சிறப்பு நிகழ்வு நடக்கும்.

    இந்த புகழ்பெற்ற சமயவிளக்கு சடங்கின் பொழுது ராட்சத யானை திடம்பு என்னும் தெய்வ சிலையினை சுமந்து செல்லும் காட்சியையும் இரவு முழுவதும் காணமுடியும்.

    மேலும் முதலில் கட்டப்பட்ட கோயிலின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் 'குருத்தோலை பந்தல்' அமைக்கப்படும்.

    மென்மையான தென்னை இலை, குருத்தோலை, வாழைப்பழம், பானை முதலியன கொண்டு கோயில் மாதிரி ஒன்று சிறிய அளவில் அமைக்கப்படும்.

    இந்த கோயிலில் தான் திருவிழா நாட்களில் தெய்வத்தின் சிலை வைக்கப்படுமாம்.

    பின்னர் திருவிழா முடிந்ததும், மீண்டும் சிலையானது கோயில் கட்டிடத்திற்குள் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    கோவில் திருவிழாக்கள்

    சமீபத்திய

    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்

    கோவில் திருவிழாக்கள்

    கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம் கேரளா
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம் கோவில்கள்
    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025