NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் இந்தூர் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் இந்தூர் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது
    ராஜா ரகுவன்ஷி தனது மனைவி சோனத்துடன் தேனிலவில் இருந்தபோது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது

    மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் இந்தூர் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 09, 2025
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    மேகாலயாவில் இறந்து கிடந்த இந்தூர் குடியிருப்பாளரான ராஜா ரகுவன்ஷியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது தலையில் இரண்டு பெரிய கூர்மையான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

    ஒன்று முன்புறத்திலும் மற்றொன்று பின்புறத்திலும். மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளில் ராஜா ரகுவன்ஷி தனது மனைவி சோனத்துடன் தேனிலவில் இருந்தபோது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.

    மே 23 அன்று தம்பதியினர் காணாமல் போன பிறகு, ஜூன் 2 ஆம் தேதி வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

    விசாரணை முன்னேற்றம்

    மே 23 அன்று தம்பதியினர் காணாமல் போனார்கள்

    மே 23 அன்று பிரபலமான சுற்றுலா தலமான நோங்ரியாட்டுக்கு மலையேற்றத்திற்கு சென்றபோது இந்த ஜோடி காணாமல் போனது.

    அவர்களை கடைசியாக மவ்லக்கியத்தில் ஆல்பர்ட் பிடே என்ற டூரிஸ்ட் கைடு பார்த்தார்.

    ஆல்பர்ட் தம்பதியினருக்கு பயண வழிகாட்டியாக வர உதவுவதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவர்கள் வேறொரு கைடு-ஐ நியமித்தனர், பின்னர் காணாமல் போனார்கள்.

    மே 24 அன்று, மவ்லக்கியத்தை அடைய தம்பதியினர் பயன்படுத்திய வாடகை ஸ்கூட்டர், ஷில்லாங்-சோஹ்ரா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    இந்தக் கண்டுபிடிப்பே காணாமல் போன தம்பதியினரைத் தேடும் பணியை ஒரு பெரிய அளவில் தூண்டியது.

    ஆதாரங்களைக் கண்டறிதல்

    கைவிடப்பட்ட ஸ்கூட்டர் மற்றும் இரத்தக்கறை படிந்த கத்தி

    சில நாட்களுக்குப் பிறகு ராஜா ரகுவன்ஷியின் உடல் ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது, அவரது தங்க மோதிரம் மற்றும் கழுத்தில் உள்ள சங்கிலியும் காணாமல் போனதால், இது ஒரு கொள்ளை சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    அந்தத் தம்பதியினர் பயன்படுத்தியதைப் போன்ற ரத்தக் கறை படிந்த கத்தி மற்றும் மழைக்கோட்டும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

    காணாமல் போனதாகக் கூறப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, சோனம் உத்தரபிரதேசத்தின் காஜிப்பூர் வந்தார்.

    ஒரு தாபா உரிமையாளரின் உதவியுடன் , அவள் தன் சகோதரனையும் காவல்துறையையும் அழைத்தார். தான் கடத்தப்பட்டு அங்கே விடப்பட்டதாக கூறினார்.

    வழக்கு தீர்வு

    மனைவி சரணடைதல் மற்றும் 3 குற்றவாளிகள் கைது

    பின்னர் சோனம் சிகிச்சைக்காக சதார் மருத்துவமனைக்கும், பின்னர் உதவிக்காக ஒரு மையத்திற்கும் அனுப்பப்பட்டார்.

    பின்னர் ஞாயிற்றுக்கிழமை காஜிப்பூரில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, இரவு முழுவதும் நடந்த சோதனைகளில் மேலும் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களில் இருவர் இந்தூரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் உத்தரபிரதேசத்தின் லலித்பூரைச் சேர்ந்தவர்.

    மத்தியப் பிரதேசத்தின் சதார் மாவட்டத்தில் திங்களன்று மற்றொரு கைது செய்யப்பட்டது.

    நோக்கம்

    கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்

    இந்த ஜோடி மே 11 அன்று திருமணம் செய்து கொண்டு மே 20 அன்று தங்கள் தேனிலவுக்காக மேகாலயாவுக்குப் புறப்பட்டது.

    மேகாலயா காவல்துறை, சோனம் தனது கணவரின் கொலையை தனது காதலர் என்று கூறப்படும் ராஜ் குஷ்வாஹாவுடன் முன்கூட்டியே திட்டமிட்டதாக குற்றம் சாட்டியது.

    இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவள் மூன்று கூலிப்படை கொலையாளிகளை அமர்த்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    சோனம் தற்போது உ.பி. காவல்துறையின் காவலில் உள்ளார். அவர்கள் காஜிபூரை அடைந்ததும் மேகாலயா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேகாலயா
    இந்தூர்
    கொலை

    சமீபத்திய

    மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் இந்தூர் நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது மேகாலயா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி; ஒரே நேரத்தில் 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா ரஷ்யா
    டாக்டர் மாதபி லதா: ஜம்முவின் சின்னமான செனாப் ரயில்வே பாலத்தின் பின்புலமான பொறியாளர் இவர்தான்! ஜம்மு காஷ்மீர்
    சாலை விபத்தை ஏற்படுத்தியவர் கண்டறியப்படாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறலாம்; இதைத் தெரிந்து கொள்ளுங்கள் ஆயுள் காப்பீடு

    மேகாலயா

    மேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு பிரதமர் மோடி
    இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை பாஜக
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் இந்தியா

    இந்தூர்

    இந்தூர் மக்களவைத் தொகுதியில் 1.7 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவு நோட்டா
    "இருங்க பாய்..": கிரைம் பிரான்ச் DCக்கே மோசடி கால் செய்து வகையாக மாட்டிய மோசடி கும்பல் சைபர் கிரைம்
    ஜனவரி 1 முதல் இந்த நகரில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு நீங்கள் பணம் கொடுத்தால் FIR தான்! இந்தியா
    மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்! மேகாலயா

    கொலை

    கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை போலீசார் சிதைத்ததாக சி.பி.ஐ குற்றச்சாட்டு கொல்கத்தா
    பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு பெங்களூர்
    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம்  கொல்கத்தா
    கொல்கத்தா மருத்துவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? CBI குற்றப்பத்திரிகை விவரிக்கிறது கொல்கத்தா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025