NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம் 
    விளையாட்டு வீரர்கள், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

    மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2023
    09:49 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    எனவே, அவருக்கு எதிராக பல மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க விவசாயிகள் இன்று 'மகாபஞ்சாயத்து' என்ற கூட்டத்தை நடத்த உள்ளனர்.

    மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து ஆலோசிக்க உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் அனைத்து காப்களின் மாபெரும் கூட்டம் இன்று நடைபெறும் என்று பாரதிய கிசான் யூனியன்(BKU) தெரிவித்துள்ளது.

    உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த பல்வேறு காப்களின் பிரதிநிதிகள் மகாபஞ்சாயத்தில் பங்கேற்க உள்ளனர்.

    details

    காவல்துறையினருக்கு 5 நாள் கெடு: விவசாயிகள் 

    இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீரர்கள் சிலர் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாயன்று கங்கையில் தங்கள் பதக்கங்களை வீச திட்டமிட்டிருந்தனர்.

    அப்போது, அவர்களை வற்புறுத்தி அதை தடுத்த விவசாயிகள், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க இன்று ஒரு கூட்டத்தை கூட்டினர்.

    WFI தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் ஆகியோர் செவ்வாய்கிழமை ஹரித்வாருக்குச் சென்று, தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச திட்டமிட்டிருந்தனர்.

    இதை தடுத்த விவசாயிகள் அமைப்பு, காவல்துறையினருக்கு 5 நாள் கெடு விதித்தது.

    விளையாட்டு வீரர்கள், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா
    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  உள்துறை
    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை டெல்லி

    டெல்லி

    இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா? ஆப்பிள் நிறுவனம்
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் இன்று திறந்தது ஆப்பிள்!  ஆப்பிள்
    ஆராத்யா பச்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம் பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025