NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்ரோவின் புதிய தலைவர் வி. நாராயணன்: இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரோவின் புதிய தலைவர் வி. நாராயணன்: இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன்
    இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன்

    இஸ்ரோவின் புதிய தலைவர் வி. நாராயணன்: இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 08, 2025
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரோவின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணன், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை கிராமத்திலிருந்து வந்தவர்.

    முன்னதாக இஸ்ரோவின் தலைவராக இருந்த சிவனும் கன்னியாகுமரியில் இருந்து வந்த விஞ்ஞானி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    நாரயணன் பள்ளி கல்வியை தமிழ் வழியிலேயே பயின்றுள்ளார்.

    சாதிக்க மொழி ஒரு தடையல்ல என்பதையும் இவரது முன்னேற்றம் எடுத்துக்காட்டுகிறது.

    ஏழை விவசாய பின்னணியிலிருந்து வந்த நாராயணனுக்கு மூன்று சகோதரர்களும், இரு சகோதரிகளும் உள்ளனர்.

    இவரும், இவரது உடன்பிறந்தவர்களும் கூரையில்லாத பள்ளியில் பயின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கிறது.

    தொடக்கம்

    விண்வெளி பயணத்தின் விதை

    1969ம் ஆண்டு அவர் முதலாம் வகுப்பு படிக்கும் போது, ​​அவரது பள்ளி ஆசிரியர்கள் நிலவில் மனிதன் வெற்றிகரமாக இறங்கியதை கூறியதை கேட்டே தனக்கு விண்வெளி ஆசை முதன்முதலில் வந்ததாக கூறுகிறார் நாராயணன்.

    10ம் வகுப்பில் முதல் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற நாராயணன், குடும்ப சூழல் காரணமாக அவர் அரசு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பில் சேர்த்தார்.

    அதன் பின்னர், அவர் ஐ.ஐ.டி., கோரக்பூரில் முதல் ரேங்குடன் ஏ.எம்.ஐ.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்.டெக் கிரையோஜெனிக் இன்ஜினியரிங், ஐ.ஐ.டி., கோரக்பூரில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பி.எச்டி., முடித்தார்.

    பயணம்

    இஸ்ரோவில் நாராயணின் பயணம்

    1984ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்துள்ளார்.

    தற்போது திருவனந்தபுரம் அடுத்த வலியமாலாவில் இயங்கி வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.

    ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசையில் அவரது நிபுணத்துவம் பல முக்கிய திட்டங்களில் கருவியாக உள்ளது.

    குறிப்பிடத்தக்க வகையில், அவர் GSLV Mk III வாகனத்தின் C25 கிரையோஜெனிக் திட்டத்திற்கான திட்ட இயக்குநராக இருந்தார்.

    இந்த ஏவுகணை வாகனத்தின் முக்கிய அங்கமான C25 நிலையை வெற்றிகரமாக உருவாக்க அவரது குழுவை வழிநடத்தினார்.

    அவரது தலைமையின் கீழ், எல்பிஎஸ்சி 183 திரவ உந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு இஸ்ரோ பணிகளுக்காக கன்ட்ரோல் பவர் பிளான்ட்களை வழங்கியுள்ளது.

    சந்திரயான் 3 

    சந்திராயன் 3 பயணத்தில் நாராயணின் பங்கு

    அவரது பணி சந்திரயான்-2, சந்திரயான்-3, மற்றும் ஆதித்யா விண்கலம் போன்ற குறிப்பிடத்தக்க பணிகளில் இருக்கிறது.

    பூமியில் இருந்து நிலவுக்கு சந்திராயன் 3 ஐ கொண்டு செல்லவும், நிலவை சுற்றவும் மென்மையாக தரையிறங்கவும் நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணம்.

    சந்திரயான் 2 விண்கலம் மென்மையாக தரையிறங்குவதில் சில சவால்களை சந்தித்தது.

    அத்திட்டம் வெற்றிபெறாத நிலையில், அதற்கான காரணம் என்ன; எங்கு தவறுகள் நிகழ்ந்தன என கண்டறியும் குழுவின் தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்டார்.

    இந்த குழு மிகக்குறுகிய காலத்தில் பிரச்னைகளை கண்டறிந்து சந்திராயன் 3ல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் வழிகாட்டியது.

    விருது

    நாராயணனுக்குக் கிடைத்த விருதுகள்; எதிர்கால பயணம்

    ஐஐடி காரக்பூரின் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கத்தின் தங்கப் பதக்கம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் வழங்கிய சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது 2018 உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளுடன் அவரது கல்வித் திறமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    Aeronautical Society of India, சார்பில் சந்திரயான்-3, ஆதித்யா எல் -1,டிவி டி1 உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மனித விண்வெளிப் பயணத்தில் கவனம் செலுத்துவது, அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்களை உருவாக்குவது, சந்திரயான்-4, ககன்யான் மிஷன், வீனஸ் மிஷன், மங்கள்யான்-2 மற்றும் மறுபயன்பாட்டு ஏவுகணையின் மேம்பாடு உட்பட இந்தியாவிலிருந்து பல முக்கிய பணிகளை உருவாக்குவது என நாராயணின் பங்களிப்பும், மேற்பார்வையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    கன்னியாகுமரி
    நிலவு ஆராய்ச்சி
    தமிழகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இஸ்ரோ

    சந்திரயான்-3 செயற்கைக்கோளில் மோதியிருக்குமாம்! இஸ்ரோ அதனை எப்படி தவிர்த்தது? சந்திரயான் 3
    இஸ்ரோவின் அடுத்த மைல்கல்: வெற்றிகரமாக சோதனை அக்னிகுல் காஸ்மோஸ் விண்வெளி
    இந்தியாவின் மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தின் மூன்றாவது சோதனை வெற்றி  இந்தியா
    சந்திரயான்-4: இஸ்ரோ ஏன் விண்வெளியில் தொகுதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது? சந்திரயான்

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் மாவட்ட செய்திகள்

    நிலவு ஆராய்ச்சி

    நிலவின் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கிய சீனாவின் Chang'e-6  சீனா
    எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு விண்வெளி
    அப்பல்லோ நிலவு பயணங்களின் போது நட்டு வைத்த நாசாவின் கொடிகள் இன்னும் அங்கே நிற்கின்றனவா? நாசா
    பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இன்று இரவு இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது வானியல்

    தமிழகம்

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்கள்; கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு
    ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம் சென்னை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025