NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம் 
    மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம்

    மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 16, 2023
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்காக இந்தாண்டு 40,193 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த விண்ணப்பம் மீதான பரிசீலனைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    சென்னை கிண்டியில் இந்த பட்டியலினை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் இன்று(ஜூலை.,16)காலை 10 மணியளவில் வெளியிட்டுள்ளார்.

    அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் 7.5% உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு என 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியலில் சேலம் மாவட்ட மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தினை பிடித்துள்ளார்.

    பட்டியல் 

    அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் கலந்தாய்வு குழு வரும் ஜூலை 20ம் தேதி துவக்கம் 

    அவரைத்தொடர்ந்து தருமபுரியை சேர்ந்த மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடத்திலும், காஞ்சிபுரம் மாணவனான முருகன் 560 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தினையும் பிடித்துள்ளனர்.

    2023ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 5 மாணவர்களும், 5 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர்.

    இதனை தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் கலந்தாய்வு குழு வரும் ஜூலை 20ம் தேதியும், 2ம் குழு ஆகஸ்ட் 9ம் தேதி மற்றும் 3ம் கலந்தாய்வு குழு ஆகஸ்ட் 31ம் தேதியும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 3ம் சுற்றின் கலந்தாய்வில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான இறுதி கலந்தாய்வு குழு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சேலம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம் ஜெயலலிதா
    தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை திரையரங்குகள்
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025