NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீட் கிடைக்காத அதிருப்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுகவின் முன்னாள் MP கணேசமூர்த்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீட் கிடைக்காத அதிருப்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுகவின் முன்னாள் MP கணேசமூர்த்தி
    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது

    சீட் கிடைக்காத அதிருப்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுகவின் முன்னாள் MP கணேசமூர்த்தி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 25, 2024
    10:01 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு தொகுதியின் தற்போதைய மக்களவை எம்.பி.யான ம.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கணேசமூர்த்தி, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு, தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கணேசமூர்த்திக்கு, நேற்று காலை திடீர் உடலில் அசௌகரியமும், வாந்தி மயக்கமும் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    கணேசமூர்த்தி

    ECMO சிகிச்சையில் கணேசமூர்த்தி 

    ஆரம்பகட்ட சிகிச்சையை தொடர்ந்து நேற்று மதியம் 2.30 மணியளவில், இரண்டு டாக்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஆம்புலன்சில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், கணேசமூர்த்தி.

    சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தி, மதிமுக தலைவர் துரை வைகோ மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, கணேசமூர்த்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ECMO சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார்.

    அதோடு, மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி.சரஸ்வதி, அ.தி.மு.க.வின் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து கணேசமூர்த்தியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதிமுக
    திமுக
    தற்கொலை
    ஈரோடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மதிமுக

    தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை தேர்தல்
    இறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி திமுக
    நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு  நாடாளுமன்றம்

    திமுக

    DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ் அண்ணாமலை
    தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய திமுக: தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்தைக்கான குழுக்கள் அமைப்பு தேர்தல்
    தொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு: கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கனிமொழி எம்பி சேலம்
    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி  தமிழக அரசு

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - அனுமதியில்லாமல் திறந்த 14 அதிமுக, திமுக அலுவலகங்களுக்கு சீல் தேர்தல் ஆணையம்
    ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி தேர்தல் ஆணையம்
    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை தேர்தல்
    ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025