Loading...
"தமிழில் பிழை இல்லாமல் வாசியுங்கள்! பட்ஜெட் கூட்டத்தொடரில் மதிமுக எம்எல்ஏ - நிதியமைச்சர் மரிய வில்சன் காரசார விவாதம்
பட்ஜெட் கூட்டத்தொடரில் மதிமுக எம்எல்ஏ - நிதியமைச்சர் மரிய வில்சன் காரசார விவாதம்

"தமிழில் பிழை இல்லாமல் வாசியுங்கள்! பட்ஜெட் கூட்டத்தொடரில் மதிமுக எம்எல்ஏ - நிதியமைச்சர் மரிய வில்சன் காரசார விவாதம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2026
05:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையைத் தமிழில் பிழை இல்லாமல் வாசிக்குமாறு மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல சொற்களை உச்சரிக்கும் போதும் வாசிக்கும் போதும் தமிழ் மொழித் தூய்மை மற்றும் பிழையின்மையைப் பேண வேண்டும் என்று அவர் அவையில் வலியுறுத்தியது பெரும் விவாதப் பொருளாக மாறியது.

நிதியமைச்சர்

கடுப்பான நிதியமைச்சர் மரிய வில்சன்

மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனின் இந்தத் திடீர் விமர்சனத்தால் நிதி அமைச்சர் மரிய வில்சன் கடுப்பானார்.

பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அதன் நிதி ஒதுக்கீடுகள் குறித்த முக்கியமான விவாதங்களை விட்டுவிட்டு, வாசிக்கும் உச்சரிப்பில் தவறு இருப்பதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதனால் அவையில் இருவருக்கும் இடையே சிறிது நேரம் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவியது.

திமுக சமாதானம்

சமாதானம் செய்த திமுக கொறடா எ.வ.வேலு

இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதல் போக்கைத் தணிக்கும் வகையில், திமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உடனடியாகத் தலையிட்டார்.

"ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு மனிதர்களின் பேச்சு வழக்கு மாறுபடுவது மிகவும் சாதாரணமான ஒன்று.

வட்டார வழக்கு மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளைப் பிழை எனக் கருதக் கூடாது." என்று கூறி அமைச்சருக்கு ஆதரவாகப் பேசி சூழ்நிலையை சமாதானம் செய்தார்.

எம்எல்ஏ ராஜேந்திரன் மதிமுகவை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தமிழ் மொழி

அவையின் கவனத்தை ஈர்த்த தமிழ் மொழி விவாதம்

சட்டமன்ற அவையில் தமிழ் மொழியின் பயன்பாடு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறித்து தொடர் விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், பட்ஜெட் உரையின் தமிழ் வாசிப்பு குறித்து எழுந்த இந்த விவாதம் சட்டமன்ற உறுப்பினர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

அமைச்சரின் விளக்கத்திற்குப் பிறகு, எ.வ.வேலுவின் தலையீட்டால் விவாதம் முடிவுக்கு வந்து, சட்டமன்றத்தின் அடுத்த கட்ட பட்ஜெட் கோரிக்கைகள் மீதான ஆய்வுகள் வழக்கம் போல் தொடர்ந்தன.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT