NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம் 
    சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம்

    சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023
    05:51 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023ல், 'மக்களைத் தேடி மேயர்'என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின்படி, பொது மக்களின் குறைகளை கண்டறிந்து அதற்கான உடனடி தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டது.

    அதன்படி, ராயபுரம் வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்குவட்டார துணைக்கமிஷனர் அலுவலகத்தில் இதன் முதல்கட்டமாக 'மக்களை தேடி மேயர்' சிறப்பு முகாம் நிகழ்ச்சியினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார்.

    இதில் மேயர் ஆர்.பிரியா பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப்பெற்று அதன் குறைகளை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

    நேற்று(மே.,3)நடந்த இந்த முகாமில் பள்ளிக்கூடத்தில் கட்டிட வசதி, சாலை வசதி, குடியிருப்பு வசதி, மழைநீர் வடிகால் வசதி, உள்ளிட்ட 401கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த மனுக்களுள் 53மனுக்கள் மீது மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார்.

    மேயர் 

    கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பெட்டகங்கள் வழங்கப்பட்டது 

    இதேபோல் சொத்துவரி மீதான புகார் மனு குறித்தும் உடனடியான தீர்வினை மேயர் அளித்துள்ளார்.

    மேலும் இந்த முகாமில் 5 பேருக்கு மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்கள், 17 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பெட்டகங்களை வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் 10 பயனாளிகளுக்கும், தலா 12 ஆயிரம் முதியோர் ஓய்வுத்தொகை மற்றும் உதவி தொகை 5 பயனாளிகளுக்கும் கொடுக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பழங்குடியினர் இன சான்றிதழ்கள் 5 பேருக்கும், பட்டா மேம்பாடு மேல்முறையீடு ஆணைகள் 5 பேருக்கும், 2 பேருக்கு வாரிசு சான்றிதழ் மேல்முறையீடு ஆணைகள், 5 பேருக்கு காலதாமத பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பட்ஜெட் 2023

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    சென்னை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  காவல்துறை
    சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்  உதயநிதி ஸ்டாலின்
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்

    பட்ஜெட் 2023

    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் ஸ்டாலின்
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் திரௌபதி முர்மு
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் நிர்மலா சீதாராமன்
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025