Page Loader
10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல் 

10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல் 

எழுதியவர் Sindhuja SM
Feb 20, 2024
05:10 pm

செய்தி முன்னோட்டம்

மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மகாராஷ்டிர சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த சில நிமிடங்களில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிரா மாநில சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களுக்கான மசோதா 2024 ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இனி, இந்த மசோதாவை முதல்வர் ஒப்புதலுக்காக சட்டப் பேரவையில் தாக்கல் செய்வார். அதன் பிறகு அது சட்டமாக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சகன் புஜ்பால் மட்டுமே இந்த சட்டத்தை எதிர்த்தார். ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டை புஜ்பால் எதிர்த்து வருகிறார்.

மகாராஷ்டிரா 

OBC பிரிவின் கீழ் மராத்தா இடஒதுக்கீட்டை கோரும் ஆர்வலர்கள் 

பிப்ரவரி 17ஆம் தேதி, முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே-பாட்டீலிடம், மராட்டிய சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க பிப்ரவரி 20 ஆம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மராத்தா இடஒதுக்கீட்டை கோரி ஜாரங்கே-பாட்டீல் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதம் அதன் ஏழாவது நாளை எட்டிய போது இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது "மராட்டிய சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்" என்று அந்த ஆர்வலர் கூறியுள்ளார் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவின் கீழ் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆர்வலர் ஜராங்கே-பாட்டீல் கோரி வருகிறார்.