NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கலவரம்: 1 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கலவரம்: 1 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
    நிலைமையைக் கட்டுப்படுத்த, RAF உட்பட பாதுகாப்புப் படைகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசப்பட்டது

    மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கலவரம்: 1 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    08:55 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, (பிப்ரவரி 15) வியாழக்கிழமை இரவு மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் எஸ்பி அலுவலகத்தை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர்.

    அதற்கு முதல்நாள், சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிய ஒரு வீடியோவில், ஆயுதம் ஏந்திய நபர்களுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் மாவட்ட காவல்துறையின் தலைமைக் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அதனை தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே இந்த கலவர கும்பல், எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டது.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் மணிப்பூர் காவல்துறை கூறியதாவது,"சுமார் 300-400 பேர் கொண்ட கும்பல் இன்று SP CCP அலுவலகத்தை முற்றுகையிட முயன்றது, கற்களை வீசியது."

    ட்விட்டர் அஞ்சல்

    மணிப்பூரில் கலவரம்

    #NewsUpdate | மணிப்பூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சூறையாடிய குக்கி சமூக மக்கள்!#SunNews | #Manipur pic.twitter.com/KoJLAyCMAS

    — Sun News (@sunnewstamil) February 16, 2024

    மீண்டும் வன்முறை 

    காவல்துறை தரப்பு கூறுவது என்ன?

    "நிலைமையைக் கட்டுப்படுத்த, RAF உட்பட பாதுகாப்புப் படைகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுவதன் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கிறது. விஷயங்கள் கண்காணிப்பில் உள்ளன" என்று காவல்துறை மேலும் கூறியது.

    இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 30 பேர் வரை காயம் அடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    முதல்நாள், கலகக்காரர்களுடன் இருந்தமைக்காக தலைமைக் காவலர் சியாம்லால்பாலை, மறுஅறிவிப்பு வரும் வரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்தார் சுராசந்த்பூர் எஸ்பி.

    அதோடு, சியாம்லால்பால் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.

    கூடுதலாக, சியாம்லால்பாலுக்கு முன் அனுமதியின்றி ஸ்டேஷனை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அவரது ஊதியம் மற்றும் படிகள், விதிகளின் கீழ், அனுமதிக்கப்படும் வாழ்வாதார கொடுப்பனவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    கலவரம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மணிப்பூர்

    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  உச்ச நீதிமன்றம்
    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  மத்திய அரசு
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு  திரௌபதி முர்மு

    கலவரம்

    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025