NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் விவகாரம்: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உருவாக்கியது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் விவகாரம்: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உருவாக்கியது உச்ச நீதிமன்றம்
    பெண்களுக்கு எதிராக நடந்த 11 வன்முறை வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன.

    மணிப்பூர் விவகாரம்: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உருவாக்கியது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 07, 2023
    05:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கண்காணிக்க மூன்று முன்னாள் பெண் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் இந்த குழு உருவாக்கப்பட உள்ளது.

    நீதிபதி ஷாலினி ஜோஷி(பாம்பே உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி) மற்றும் நீதிபதி ஆஷா மேனன்(டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி) ஆகியோரும் இந்த குழுவில் அடங்குவர்.

    மறுவாழ்வு, இழப்பீடு போன்ற விசாரணை அல்லாத விஷயங்களை கண்காணிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    மக்களுக்கு சட்டத்தின் மீது இருந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    டிஜில்வ்க்

    விசாரணையை மேற்பார்வையிட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் 

    மணிப்பூரின் வழக்குகளின் விசாரணையை மேற்பார்வையிட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தத்தா பத்சல்கிகரை நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

    மேலும், சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட மற்ற மாநிலங்களில் இருந்து DySP பதவிக்கு குறையாத 5 அதிகாரிகளை நியமிக்க நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

    மத்திய அரசால் உருவாக்கப்பட்ட 42 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை(SIT) கண்காணிக்க பிற மாநிலத்தை சேர்ந்த 6 டிஐஜி அந்தஸ்து அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு SIT குழுக்களிலும் பிற மாநிலத்தை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டராவது இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    இது தவிர, மணிப்பூர் இனமோதல்களின் போது பெண்களுக்கு எதிராக நடந்த 11 வன்முறை வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    மணிப்பூர்

    எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள் நாடாளுமன்றம்
    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ட்விட்டர்
    மணிப்பூர் கலவரம்: 4 பேர் கைது; முதல்வர் பதவி விலக மாட்டார் எனத்தகவல் கலவரம்
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை

    உச்ச நீதிமன்றம்

    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  ஜல்லிக்கட்டு
    ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜல்லிக்கட்டு
    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை  டெல்லி
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025