NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம் 
    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்

    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 22, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசினை கண்டித்து INDIA கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள்(ஜூலை.,24)போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

    மணிப்பூர் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்முறை கும்பலால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து நாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் அளித்ததாக தெரிகிறது.

    இதனை தொடர்ந்து நேற்று(ஜூலை.,21)காலை 11 மணிக்கு அவை துவங்கியதுமே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து விவாதிக்க அரசு தயாராகவுள்ளது என்று கூறினார்.

    கலவரம் 

    தமிழகத்தில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தகவல் 

    எனினும் எதிர்க்கட்சிகள் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், மக்களவை கூட்டமானது வரும் ஜூலை.,24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதன் எதிரொலியாக தற்போது INDIA கூட்டணி கட்சிகள் மத்திய அரசினை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் வரும் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    மேலும், நாளை(ஜூலை.,23) சென்னையில் தாய்மையினை அவமதிக்கும் செயலினை தடுக்க பாஜக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து எம்.பி.கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திமுக அறிவித்துள்ளது.

    அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, மணிப்பூர் விவகாரத்தில் ஹீராதாஸ் உள்ளிட்ட 4 பேரினை கைது செய்த போலீசார் அவர்களை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    மணிப்பூர்
    ராஜ்நாத் சிங்
    பிரதமர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பாஜக

    "இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ  முதல் அமைச்சர்
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி  கர்நாடகா
    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்

    ராஜ்நாத் சிங்

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025