NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு 
    தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு

    தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு 

    எழுதியவர் Nivetha P
    Sep 10, 2023
    04:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட டிரைவரின் உடல் எலும்புக்கூடுகளாக செப்டிக் டேங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சிவகங்கை-தேவகோட்டை பகுதியிலுள்ள கம்பர் தெருவினை சேர்ந்தவர் சீராளன்.

    இவர் தான் வசிக்கும் வீட்டிற்கு பின்பக்கமுள்ள மற்றொரு வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார்.

    அந்த வீட்டில் சுமார் 7வருடங்களுக்கு முன்னர் பாண்டியன்-சுகந்தி என்னும் தம்பதியினர் வாடகைக்கு இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்துள்ளனர்.

    பாண்டியன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் வேலை விஷயமாக கோவை சென்ற பாண்டியன் வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி சுகந்தி கூறி வந்துள்ளார்.

    பாண்டியனை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    கொலை 

    கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது 

    இதனால் சிறிதுக்காலத்திற்கு பிறகு சுகந்தி அந்த வீட்டினை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    தேவகோட்டை வீரபாண்டியபுரம் நடுத்தெருவில் தற்போது சுகந்தி தையல் கடை ஒன்றினை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே தனது வீட்டின் செப்டிக் டேங்க்கினை சீராளன் நேற்றுமுன்தினம் சுத்தம் செய்துள்ளார்.

    அப்போது அதில் மனித எலும்புக்கூடுகள், ஒரு கைலி, சட்டை மற்றும் உடைந்த ஜன்னல் கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளது.

    இதனை கண்டு அதிர்ந்துபோன சீராளன் தேவகோட்டை டவுன் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் அங்கு வந்து போலீசார் விசாரணை செய்ததில் அது பாண்டியனின் கைலி என்பது உறுதியாகியுள்ளது.

    பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் சுகந்தியிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகங்கை
    கோவை
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சிவகங்கை

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை தமிழ்நாடு
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா? தமிழ்நாடு

    கோவை

    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  காவல்துறை
    மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு  தமிழ்நாடு

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025