NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி  7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்
    140 நாட்களில், 7,000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்ததை பப்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 12, 2023
    10:30 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில், ராஜஸ்தானின் நாகூரில் உள்ள குர்ச்சி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் பப்பு சவுத்ரி என்ற இளைஞர், மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    140 நாட்களில், 7,000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்ததை பப்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

    காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு தற்போது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

    "நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். மேலும், விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும்" என்று பப்பு கூறி இருக்கிறார்.

    சைக்கிள் பயணத்திற்கான செலவுகள் அவர் செய்யும் சில ஃப்ரீலான்சிங் வேலைகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.

    இந்தியா

    சைக்கிள் பயணத்தின் போது இருந்த பிரச்சனைகள்

    முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பப்பு சௌத்ரியின் பெற்றோர், அவர் இது குறித்து விளக்கம் அளித்ததும் ஒப்புக்கொண்டார்களாம்.

    மழை, வெயில் என்று சைக்கிள் பயணத்தின் போது பல பிரச்சனைகள் இருந்ததாகவும் அதை எல்லாம் மீறி தான் தன் இலக்கை அடைந்ததாகவும் பப்பு கூறியுள்ளார்.

    அவரது பயணம் ஜெய்ப்பூரில் முடிந்திருக்கிறது. நாகூரில் இருந்து ஜெய்ப்பூர் வரை அவர் சைக்கிளில் பயணத்திருக்கிறார்.

    சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோளாக இருந்திருக்கிறது. பப்பு சௌத்ரி, ஒவ்வொரு மாவட்டத் தலைமையகத்திலும் இரண்டு முதல் மூன்று மரக்கன்றுகளை நட்டு, தன் கருத்தை பரப்பி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ராஜஸ்தான்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    இந்தியா

    வேவு பார்க்க அனுப்பப்பட்ட புறா, ஒடிஷா கடற்கரையில் பிடிபட்டது இந்தியா
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா
    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர் இலங்கை
    'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி பாஜக

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025