NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 

    எழுதியவர் Nivetha P
    May 30, 2023
    08:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது.

    இதனை அப்பகுதி வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து அதனை தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

    கடந்த சில வாரத்திற்கு பிறகு அங்கிருந்து வெளியேறிய இந்த அரிக்கொம்பன் காட்டு யானை திருவில்லிபுத்தூர், குமுளி, மேகமலை வனப்பகுதிகளுக்குள் புகுந்து கடந்த 27ம் தேதி தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் நுழைந்தது என்று கூறப்படுகிறது.

    அங்கு சாலைகளில் நடமாடும் மக்களை விரட்டியதால் அவர்கள் பீதியடைந்து அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    யானை 

    நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் 

    இதனிடையே அரிக்கொம்பன் யானையின் அட்டகாசம் தொடர்ந்து வந்த நிலையில், ஏ.டி.எம்.மையத்தின் காவல் பணியில் இருந்த 65 வயதுடைய பால்ராஜ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து காயமுற்ற பால்ராஜை அங்கிருந்தோர் மீட்டு உடனே கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார்.

    யானையால் தாக்கப்பட்ட பால்ராஜுக்கு தலையிலும், வயிற்று பகுதியிலும் பலத்தக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அவரது உடல்நிலை அண்மையில் மோசமானதையடுத்து, நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    முன்னதாக பால்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பொழுது, வனத்துறை அமைச்சர் அவரை நேரில் சென்று சந்தித்து ரூ.50ஆயிரம் நிதியுதவி செய்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கேரளா

    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    கோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை இந்தியா
    கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது இந்தியா
    கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம் இந்தியா

    தமிழ்நாடு

    கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  முதல் அமைச்சர்
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  காவல்துறை
    அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி  மத்திய அரசு

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025