NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 

    எழுதியவர் Nivetha P
    May 30, 2023
    08:03 pm
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு

    கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதனை அப்பகுதி வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து அதனை தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒப்படைத்தனர். கடந்த சில வாரத்திற்கு பிறகு அங்கிருந்து வெளியேறிய இந்த அரிக்கொம்பன் காட்டு யானை திருவில்லிபுத்தூர், குமுளி, மேகமலை வனப்பகுதிகளுக்குள் புகுந்து கடந்த 27ம் தேதி தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் நுழைந்தது என்று கூறப்படுகிறது. அங்கு சாலைகளில் நடமாடும் மக்களை விரட்டியதால் அவர்கள் பீதியடைந்து அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    2/2

    நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் 

    இதனிடையே அரிக்கொம்பன் யானையின் அட்டகாசம் தொடர்ந்து வந்த நிலையில், ஏ.டி.எம்.மையத்தின் காவல் பணியில் இருந்த 65 வயதுடைய பால்ராஜ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயமுற்ற பால்ராஜை அங்கிருந்தோர் மீட்டு உடனே கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார். யானையால் தாக்கப்பட்ட பால்ராஜுக்கு தலையிலும், வயிற்று பகுதியிலும் பலத்தக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை அண்மையில் மோசமானதையடுத்து, நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முன்னதாக பால்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பொழுது, வனத்துறை அமைச்சர் அவரை நேரில் சென்று சந்தித்து ரூ.50ஆயிரம் நிதியுதவி செய்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கேரளா
    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை

    கேரளா

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை தமிழ்நாடு
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்  தமிழ்நாடு
    ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை  தேனி

    தமிழ்நாடு

    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை
    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்
    திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் கோலாகலமான தேரோட்டம் திருவிழா

    அரசு மருத்துவமனை

    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி சென்னை
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்  தமிழ்நாடு
    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்!  இந்தியா
    சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023