NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை
    இந்தியா

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை

    எழுதியவர் Nivetha P
    May 30, 2023 | 06:27 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை

    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. கூடுதல் விலை கொண்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுவதால், அவ்வப்போது அதிகாரிகள் திடீர் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனையடுத்து கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் கடைகளில் கம்ப்யூட்டர் பில்லிங் முறையினை கொண்டுவர டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர், டாஸ்மாக் முறைகேடுகளில் சமீபத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 1,967 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கூடுதல் விலையில் விற்பனை செய்யும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

    வங்கிகளோடு டாஸ்மாக் நிறுவனம் ஆலோசனை 

    மேலும் அவர், இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு காண கம்ப்யூட்டர் பில்லிங் முறையினை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இதன்படி மது வாங்குவோர் அதற்கான தொகையினை முதல் கவுண்டரில் கணினி பில்லினை பெற்று கொண்டு, இரண்டாவது கவுண்டரில் அதற்கான பணத்தை செலுத்தி மதுபானத்தினை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இந்த முறையினை மாநிலம் முழுவதும் கொண்டுவருவதா அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொண்டு வருவதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து, ஜூன் மாத இறுதிக்குள் கியூஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையினை செலுத்தி மதுவை பெறுவதற்கான நடவடிக்கையினையும் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறார்கள். இம்முறையினை கொண்டுவர வங்கிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    கேரளா

    தமிழ்நாடு

    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை
    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்
    திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் கோலாகலமான தேரோட்டம் திருவிழா

    கேரளா

    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்  தமிழ்நாடு
    ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை  தேனி
    சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023