NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காணாமல் போன சிறுவன் என இரண்டு வெவ்வேறு குடும்பங்களுடன் இணைந்த ஒரே நபர்; குழம்பிய காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காணாமல் போன சிறுவன் என இரண்டு வெவ்வேறு குடும்பங்களுடன் இணைந்த ஒரே நபர்; குழம்பிய காவல்துறை
    காணாமல் போன சிறுவன் என இரண்டு வெவ்வேறு குடும்பங்களுடன் இணைந்த ஒரே நபர்

    காணாமல் போன சிறுவன் என இரண்டு வெவ்வேறு குடும்பங்களுடன் இணைந்த ஒரே நபர்; குழம்பிய காவல்துறை

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 01, 2024
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    பீம் சிங் என்ற மோனு ஷர்மா என்று கூறிக்கொள்ளும் நபர், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இரண்டு குடும்பங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறி, கண்ணீர் மல்க இணைந்து சிக்கலான மர்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில், சிறுவயதில் கடத்திச் செல்லப்பட்டு, கொத்தடிமைத் தொழிலில் தள்ளப்பட்டதாகக் கூறி தனது குடும்பத்துடன் 31 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்ததாக செய்திகள் வெளியாகின.

    பீம் சிங் 31 ஆண்டுகளுக்கு முன்பு தனது எட்டு வயதில் கடத்தப்பட்டதாகக் கூறி காசியாபாத் போலீஸை அணுகினார்.

    அங்கு, ராஜஸ்தானில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு, அடித்து, ஆடுகளை வளர்க்க வற்புறுத்தியது போன்ற கொடூரமான விசித்திரவதைகளை எதிர்கொண்டதாகக் கூறினார்.

    உத்தரகண்ட்

    உத்தரகண்டிலும் இதே வேலையைச் செய்த பீம் சிங்

    முன்னதாக, கடந்த ஜூலை மாதம் உத்தரகாண்டின் டேராடூனில் ஒரு குடும்பத்துடனும் பீம் சிங், மோனு ஷர்மா என்ற பெயரில் ஒரு குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

    அங்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தங்கள் மகன் என்று கூறி ஐந்து மாதங்களுக்கு முன்பு டேராடூன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதைய காசியாபாத் சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியான பின்னர், இதுகுறித்து அறிந்த உத்தரகண்ட் பெற்றோர் கபில்தேவ் ஷர்மா மற்றும் ஆஷா ஷர்மா மீண்டும் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.

    மோனு ஷர்மா எனும் பீம் சிங் சமீபத்தில் டெல்லிக்கு வேலைக்குச் செல்வதாக கூறி, டேராடூனில் இருந்து கிளம்பியதாகவும், பின்னர் தங்கள் தொடர்பை துண்டித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    விசாரணை

    காவல்துறை விசாரணை

    டேராடூனில் இருந்து திடீரெனப் புறப்பட்ட அந்த நபர், காசியாபாத்தில் மீண்டும் இதேபோல் வேறு ஒரு குடும்பத்துடன் இணைந்துள்ள நிலையில், அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிய இரண்டு மாநில காவல்துறையும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

    அந்த நபர் சாத்தியமான நிதி மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் இதைச் செய்கிறாரா என்பது குறித்தும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

    இதற்கிடையே, குறிப்பிடத்தக்க வகையில், டேராடூன் குடும்பத்திலும், காசியாபாத் குடும்பத்திலும், காணாமல் போனவரின் தந்தை மோனு ஷர்மா எனும் பீம் சிங்கை சந்தேக நோக்கத்துடனேயே எதிர்கொண்டுள்ளனர்.

    குறிப்பாக காசியாபாத் தந்தை தனது மகன் என்பதை இறுதி செய்ய டிசம்பர் 5ஆம் தேதிக்கு பிறகு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உத்தரப்பிரதேசம்

    "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள்  இந்தியா
    'நான் முதல் ரேங்க் எடுக்காமல் இருந்திருக்கலாம்': இணையத்தில் உருவ கேலி செய்யப்பட்டதால் மாணவி வருத்தம்  இந்தியா
    அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க 24 மணி நேரம் கெடு காங்கிரஸ்
    'மகள்கள் தோற்றுவிட்டார்கள்': பிரிஜ் பூஷனின் மகன் வேட்புமனு குறித்து சாக்ஷி மாலிக் கருத்து பிரிஜ் பூஷன் சரண் சிங்

    உத்தரகாண்ட்

    ஒரு வாரத்திற்கு மேலாக, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? விபத்து
    உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்? மத்திய அரசு
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ் விபத்து
    சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம்  விபத்து

    இந்தியா

    சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; ஜார்கண்டில் பாஜகவுக்கு பின்னடைவு தேர்தல் முடிவு
    ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிந்தே அதன் பங்குகளை விற்றது அதானி; வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு அதானி
    இந்திய தேர்தலை பாத்து கத்துக்கணும்; கலிபோர்னியா வாக்கு எண்ணிக்கை 20 நாட்களாக நடப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து எலான் மஸ்க்
    1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025