NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை
    சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை

    எழுதியவர் Nivetha P
    Jan 20, 2023
    10:48 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.

    அப்போது அதில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், அதே வகுப்பில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

    இந்த விவகாரம் பெரும் அளவில் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

    அதில் சம்பந்தப்பட்ட நபர் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்று தெரியவந்ததையடுத்து, அவருக்கு ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

    பின்னர் இவர் மீது போலீசாரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், டெல்லி போலீசார் அவருக்கு லுக்அவுட் நோட்டிஸ் வெளியிட்டது.

    ஏ.என்.ஐ.,செய்தி நிறுவனம் தகவல்

    ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை

    இதனையடுத்து, பெங்களூரில் தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை போலீசார் சம்பவம் முடிந்து 6 வாரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் இவருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் ஏர் இந்தியா நிறுவனம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    முன்னதாக, விமானத்தில் நடந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட பெண் விமான ஊழியர்களிடம் தெரிவித்தும், அவர்கள் மிக அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்பட்டதால் அந்நிறுவனம் மீது விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலகம்
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025