NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை
    இந்தியா

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை
    எழுதியவர் Nivetha P
    Jan 20, 2023, 10:48 am 0 நிமிட வாசிப்பு
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை
    சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை

    கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது அதில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், அதே வகுப்பில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் அளவில் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நபர் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்று தெரியவந்ததையடுத்து, அவருக்கு ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இவர் மீது போலீசாரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், டெல்லி போலீசார் அவருக்கு லுக்அவுட் நோட்டிஸ் வெளியிட்டது.

    ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை

    இதனையடுத்து, பெங்களூரில் தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை போலீசார் சம்பவம் முடிந்து 6 வாரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் ஏர் இந்தியா நிறுவனம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. முன்னதாக, விமானத்தில் நடந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட பெண் விமான ஊழியர்களிடம் தெரிவித்தும், அவர்கள் மிக அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்பட்டதால் அந்நிறுவனம் மீது விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலக செய்திகள்
    விமானம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    உலக செய்திகள்

    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! இங்கிலாந்து

    விமானம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023