NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி
    சென்னை-திருச்சி இண்டிகோ விமானம்

    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி

    எழுதியவர் Nivetha P
    Jan 18, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மாதம் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் வரிசையாக ஏறி கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது விமானத்தில் ஏறிய பயணி ஒருவர் தவறுதலாக வலது பக்கம் இருந்த அவசரக்கால கதவினை திறந்துள்ளார். இதனை கவனித்த விமான சிப்பந்திகள் உயர் அதிகாரிகளுக்கு உடனே தகவல் அளித்துள்ளார்கள்.

    அதன்பேரில், அவசரக்கால கதவு உடனடியாக பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தின் அழுத்தமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, கட்டாயமாக மேற்கொள்ளவேண்டிய அனைத்து எஞ்சினியரிங் சோதனைகளும் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    திருச்சி

    விமான பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என அறிக்கை வெளியீடு

    விமான நிலையத்திலேயே அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்ட பின்னரே விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கிட்டத்தட்ட 42நிமிடங்கள் தாமதமாக விமானம் கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த சம்பவம் குறித்து இண்டிகோ சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, அவசரக்கால கதவை திறந்த பயணி, அவர் செய்த செயலுக்கு உடனடியாக மன்னிப்பு கோரியதாக கூறியுள்ளது.

    இதேபோல், விமானபோக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ, விமான பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டிஜிசிஏ உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போதுதான் இதுகுறித்து வெளியே தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    திருச்சி

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025