NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது
    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது

    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 21, 2023
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராமசந்திரன்(25).

    எம்.எஸ்.சி.படித்துள்ள இவர் அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்துள்ளார்.

    இதற்கிடையே தருமபுரி மாவட்டம் அருகே ஒட்டப்பட்டியை சேர்ந்த புஷ்பலிங்கம்(34) என்பவருடன் இவருக்கு பழக்கம் இருந்துவந்துள்ளது.

    அவரிடம் ராமசந்திரன் தனக்கு எப்படியாவது அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைவேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

    இதனைப்பயன்படுத்தி கொண்ட புஷ்பலிங்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரிடம் இருந்து 24 லட்சத்து 80 ஆயிரம் தொகையினை அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி வாங்கியுள்ளார்.

    ஆனால் இதுவரை ராமச்சந்திரனுக்கு வேலை எதுவும் அவர் வாங்கித்தரவில்லை.

    3 ஆண்டுகள் கழிந்த நிலையில், வேலை எதுவும் கிடைக்காத காரணத்தினால் தான்னை அந்த நபர் ஏமாற்றியதை உணர்ந்துள்ளார் ராமச்சந்திரன்.

    சிறையில் அடைப்பு

    மோசடி செய்த நபரை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

    இதனால் அவர் புஷ்பலிங்கத்திடம் தான் கொடுத்த பணத்தினை திருப்பு கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ராமசந்திரன் கல்லாவி காவல் நிலையத்தில், புஷ்பலிங்கம் என்பவர் தன்னிடம் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி தவணை முறையில் ரூ.24.80 லட்சத்தினை வாங்கினார்.

    வேலை வாங்கித்தராத பட்சத்தில், தற்போது பணத்தினை திருப்பி கேட்டால் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

    மேலும் என்னை திட்டியும், மிரட்டல் விடுத்தும் வருகிறார் என்று புகாரளித்துள்ளார்.

    இதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் புஷ்பலிங்கத்தை கைது செய்து ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி சிறையில் அடைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாவட்ட செய்திகள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மாவட்ட செய்திகள்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் விருதுநகர்
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை வைரஸ்
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது காவல்துறை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை திருவண்ணாமலை
    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம் சுகாதாரத் துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025