NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்
    இந்தியா

    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்
    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023, 05:03 pm 0 நிமிட வாசிப்பு
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்

    தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குறித்த சென்டர்களில் பயின்ற மாணவர்கள் மட்டும் அதிகமதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தினை கொண்டுவந்தார். அப்போது பேசியஅவர், குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகபெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு விவகாரம் தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பத்தினை தீர்க்கும் வகையில், முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் பதிலளித்துள்ளார். அப்போது பேசியஅவர், தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் தான் தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள். 2000பேர் தென்காசியில் தேர்வுபெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம்

    அதேபோல் 2000 பேர் தேர்ச்சிப்பெற்றதாக கூறப்படும் பயிற்சி மையம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தேர்வு மையங்களை வைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மனிதவள மேலாண்மைத்துறை செயலாளரிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைகேடு புகார் வந்தவுடனே செயலாளரிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தினேன். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். மேலும் குரூப்4 தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் விவரங்கள் மாவட்டவாரியாக கேட்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் ஒரே தேர்ச்சி மையத்தில் தேர்வெழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றது குறித்தும் தேர்வுமைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    எடப்பாடி கே பழனிசாமி
    தமிழ்நாடு
    சென்னை

    எடப்பாடி கே பழனிசாமி

    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் தமிழக அரசு
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி ஈரோடு
    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி

    சென்னை

    சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம் பட்ஜெட் 2023
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு தமிழக காவல்துறை
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சுற்றுலாத்துறை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023