NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்றலாம்": 500 பக்க அறிக்கையில் நெறிமுறைகள் குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்றலாம்": 500 பக்க அறிக்கையில் நெறிமுறைகள் குழு
    "மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்றலாம்": 500 பக்க அறிக்கையில் நெறிமுறைகள் குழு

    "மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்றலாம்": 500 பக்க அறிக்கையில் நெறிமுறைகள் குழு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 09, 2023
    08:52 am

    செய்தி முன்னோட்டம்

    திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவை எம்.பி.யாக நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

    மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் "மிகவும் ஆட்சேபனைக்குரியது, நெறிமுறையற்றது, கொடூரமானது மற்றும் குற்றவியல்" என்று கூறிய குழு, கடுமையான தண்டனைக்கு பரிந்துரைத்துள்ளது.

    NDTV-யில் குறிப்பிட்டுள்ள செய்திபடி, 500 பக்க அறிக்கையின் செயல்பாட்டுப் பகுதியில், மஹுவா மொய்த்ரா, "வெளிநபர்களுடன்" தன்னுடைய பயனர் ஐடியைப் பகிர்ந்து கொண்டதாகவும், தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் இருந்து பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றதாகவும், அது "கடுமையான தண்டனைக்கு" உரியது என்றும், அவரது தரப்பில் அது "கடுமையான தவறான செயல்" என்றும் குழு முடிவு செய்துள்ளது.

    card 2

    அறிக்கை என்ன சொல்கிறது?

    மஹுவா மொய்த்ரா மற்றும் தர்ஷன் ஹிராநந்தனி ஆகியோருக்கு இடையேயான பணப் பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக, 'க்விட் ப்ரோ க்வோ'வின் ஒரு பகுதியாக, சட்ட ரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மக்களவை சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மஹுவா மொய்த்ரா நாளை மாலை 4 மணிக்கு குழு முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து மொய்த்ரா பணம் பெற்றதாகவும், இதற்காக தனது பாராளுமன்ற உள்நுழைவை தொழிலதிபருடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதாகவும் புகாரளிக்கப்பட்டது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிணாமுல் காங்கிரஸ்

    சமீபத்திய

    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி
    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்

    திரிணாமுல் காங்கிரஸ்

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் மேற்கு வங்காளம்
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025