NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம்
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம்

    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம்

    எழுதியவர் Nivetha P
    Mar 28, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் மதுரவாசல் என்னும் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த கோயிலில் 13 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்துள்ளது.

    இதனால் நேற்று(மார்ச்.,27) இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடந்தேறியது.

    ஆரணி தாசரதி பட்டாச்சாரி தலைமையில் புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு விமான கோபுரம், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    கோயில் உற்சவர் மாட வீதி வழியாக திருவீதி உலா

    பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவையும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் கோயில் வளாகத்தில் அளிக்கப்பட்டது.

    அதனையடுத்து கோயில் உற்சவர் மாட வீதி வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா கணபதி மற்றும் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் நடந்த நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகள் அனைத்தும் எம்.எஸ்.வரதராஜன் தலைமையில் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாவட்ட செய்திகள்
    கோவில்கள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மாவட்ட செய்திகள்

    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள் தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல் திருவண்ணாமலை
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள் கன்னியாகுமரி

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்

    தமிழ்நாடு

    கோவை பள்ளியில் நடந்த போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சி - பாலியல் வன்கொடுமை குறித்து கூறிய 12 வயது சிறுமி இந்தியா
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு மாவட்ட செய்திகள்
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025