NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம் 
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்

    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 12, 2023
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அடிக்கடி கர்ப்பிணிகள் பிரசவத்தின் பொழுது உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

    அதன்படி கடந்த மாதம் 2 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த நிலையில், கடந்த 29ம் தேதி வண்டியூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

    இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத், நேரடியாக மருத்துவமனை சென்று, இறந்த கர்ப்பிணியின் ரத்த மாதிரிகளை சோதனை செய்துள்ளார் என்று கூறப்பட்டது.

    போராட்டம் 

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் 

    இந்நிலையில், மருத்துவர்களிடம் வினோத் மரியாதை இல்லாமல் பேசியதாகவும், அத்துமீறி உள்ளே நுழைந்து மருத்துவமனை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்ததாகவும், மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    எனவே வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறி அவர்கள் நேற்று(அக்.,11)தர்ணா போராட்டம் செய்துள்ளனர்.

    மேலும், பணிசுமையினை குறைக்க வேண்டும் உள்ளிட்ட வேறு பல கோரிக்கைகளை முன்வைத்தும் இப்போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கோரிக்கைகள் 

    மகப்பேறு மருத்துவர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க கோரிக்கை 

    இப்போராட்டம் தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் டாக்டர்.செந்தில் தலைமையில் நடந்தது.

    இதனிடையே இதுகுறித்து அவர் கூறியதாவது, "மகப்பேறு மருத்துவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகவுள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்க வேண்டும். மகப்பேறு இறப்பு தணிக்கை, மாநில அளவில், உயர்மட்ட குழு கொண்டு, மூத்த மருத்துவர்கள் நடத்த வேண்டும்".

    "நிர்வாக தணிக்கைகள் மட்டும் ஆட்சியர், இயக்குனர்கள் கொண்டு நடத்தபட வேண்டும். ஆறு தணிக்கைகள் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் அதனை ஒரே தணிக்கையாக மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

    தீர்வு 

    மருத்துவ முகாம்கள் புறக்கணிக்கப்படும் 

    அதனை தொடர்ந்து பேசிய அவர், இவை அனைத்துக்கும் தீர்வு கொண்டுவரப்படும் வரை, மதுரை அரசு மருத்துவமனை பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்யப்பட மாட்டாது.

    தணிக்கை, ஆய்வு மற்றும் காப்பீடு கூட்டங்கள் போன்றவை புறக்கணிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, இந்த தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மருத்தவ முகாம்களும் புறக்கணிக்கப்படும் என்றும்,

    வாட்ஸ் அப் க்ரூபில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அறுவை சிகிச்சை 

    குடும்பநல அறுவை சிகிச்சை புறக்கணிப்பு 

    இதனிடையே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்கள் எதிர்ப்பினை காட்டுவதோடு,

    நோயாளிகளுக்கு மருத்துவம் அளித்து அவர்களுக்கான சேவைகளை செய்வதை புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் குடும்பநல அறுவை சிகிச்சை செய்வதனை புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

    அதன்படி வரும் 16ம் தேதி முதல் அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசு மருத்துவமனை
    மதுரை
    மருத்துவமனை
    போராட்டம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்

    மதுரை

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது  எடப்பாடி கே பழனிசாமி
    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை  உணவு பாதுகாப்பு துறை
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மெட்ரோ

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025