NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு 
    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு 
    இந்தியா

    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    April 21, 2023 | 05:48 pm 0 நிமிட வாசிப்பு
    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு 
    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு

    மதுரை சித்திரை திருவிழா வரும் 23ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 2ம்தேதியும், திருத்தேரோட்டம் மே 3ம்தேதியும் நடைபெறவுள்ளது. அதேபோல் மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா வரும் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே 10ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கிடையே மே 3ம்தேதி மாலை 6 மணியிலிருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். இந்த திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம்தேதி நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத்தருவார்கள். கள்ளழகர் ஆற்றில் இறங்கும்பொழுது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சுத்தமானத்தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடிக்கவேண்டும் என வேண்டுகோள் 

    இதனைதொடர்ந்து, கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தேனியிலிருந்து வைகை அணை நீரானது ஆண்டுதோறும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடைபெறவுள்ள இந்த அழகர் ஆற்றிலிறங்கும் நிகழ்வுக்கு வரும் ஏப்ரல் 30ம்தேதி முதல் 6 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையில் இருக்கும் அளவின் பொருட்டு தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அழகர் மீது சாயம் கலந்தத்தண்ணீரை அடிக்கிறார்கள். இதனால் சாமிச்சிலைகள், தங்கக்குதிரை வாகனம், ஸ்வாமிக்கு அணிந்திருக்கும் நகைகள், கள்ளழகரோடு வரும் பட்டர்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்தாண்டு பக்தர்கள் பாரம்பரிய முறையிலான தண்ணீர் பைகளை பயன்படுத்தவேண்டும். சுத்தமானத்தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடிக்கவேண்டும் என்று அக்கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மதுரை
    சித்திரை திருவிழா

    மதுரை

    வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்? தமிழ்நாடு
    மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது  குஜராத்
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னை
    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு கோவில் திருவிழாக்கள்

    சித்திரை திருவிழா

    மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு  மதுரை
    சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்! திருப்பூர்
    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை  மதுரை
    மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்  மதுரை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023