NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு 
    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு

    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Apr 21, 2023
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை சித்திரை திருவிழா வரும் 23ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 2ம்தேதியும், திருத்தேரோட்டம் மே 3ம்தேதியும் நடைபெறவுள்ளது.

    அதேபோல் மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா வரும் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே 10ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    இதற்கிடையே மே 3ம்தேதி மாலை 6 மணியிலிருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார்.

    இந்த திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம்தேதி நடக்கவுள்ளது.

    இதில் கலந்துகொள்ள மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத்தருவார்கள்.

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும்பொழுது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வைகை 

    சுத்தமானத்தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடிக்கவேண்டும் என வேண்டுகோள் 

    இதனைதொடர்ந்து, கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தேனியிலிருந்து வைகை அணை நீரானது ஆண்டுதோறும் திறக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு நடைபெறவுள்ள இந்த அழகர் ஆற்றிலிறங்கும் நிகழ்வுக்கு வரும் ஏப்ரல் 30ம்தேதி முதல் 6 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அணையில் இருக்கும் அளவின் பொருட்டு தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அழகர் மீது சாயம் கலந்தத்தண்ணீரை அடிக்கிறார்கள்.

    இதனால் சாமிச்சிலைகள், தங்கக்குதிரை வாகனம், ஸ்வாமிக்கு அணிந்திருக்கும் நகைகள், கள்ளழகரோடு வரும் பட்டர்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    எனவே இந்தாண்டு பக்தர்கள் பாரம்பரிய முறையிலான தண்ணீர் பைகளை பயன்படுத்தவேண்டும்.

    சுத்தமானத்தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடிக்கவேண்டும் என்று அக்கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025