NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்
    எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் காலமானார்

    மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்

    எழுதியவர் Nivetha P
    Jan 13, 2023
    12:16 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகிறது என்று அறிவிக்கப்பட்டது.

    2018ம் ஆண்டு அதற்கான இடமாக மதுரை தோப்பூர் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு அடுத்தாண்டு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

    ஆனால் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்பெறவில்லை.

    இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு தலைவரை மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

    அதன் படி, மதுரை வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன் வெங்கட்ராமன் மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    இவர் தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கெளரவ பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நெறிமுறைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திடீர் மாரடைப்பு

    சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் காலமானார்

    இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக டாக்டர் எய்ம்ஸ் மருத்துவமனை தலைவரான நாகராஜன் வெங்கட்ராமன் அவர்கள் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

    இதனையடுத்து, அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 12.15மணிக்கு காலமானார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டது.

    இவரது மறைவினை அவரது மருமகனும் மாநில கூட்டுறவுத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் உறுதி செய்துள்ளார். நாகராஜன் வெங்கட்ராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    அடிக்கல்நாட்டி இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் 2021ம்ஆண்டு மார்ச் மாதம் செய்யப்பட்டது.

    ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானபணிகள் துவங்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025