NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2023
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியிலிருந்த காலக்கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.

    கடந்த 2011ம்.,ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவர் மீதும் இவரது மனைவி மீதும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75கோடி அளவில் சொத்து சேர்த்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்த நிலையில் கடந்த 2016ம்.,ஆண்டு அவர்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதனையடுத்து கடந்த 2017ம்.,ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கினை மேல்முறையீடு செய்தனர்.

    இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறை 39 சாட்சியங்களிடம் மேற்கொண்ட புலன் விசாரணை அறிக்கையினையும் ஏற்றுக்கொண்டு, கடந்த 19ம்.,தேதி தீர்ப்பு வழங்கினார்.

    வழக்கு 

    அமைச்சர் பொன்முடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்த கோரிக்கை 

    அதில் அவர், '64.90% வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் சொத்து சேர்த்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

    அதனால் அமைச்சர் பொன்முடியின் விடுதலை செல்லாது' என்று கூறியிருந்தார்.

    மேலும் இன்று(டிச.,21)இவ்வழக்கின் தண்டனை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

    அப்போது, இவர்களது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, 'அமைச்சரின் வயதையும், உடல்நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்' என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    தீர்ப்பு

    ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு 

    இதனையடுத்து நீதிபதி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    எனினும், அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை விதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த அவகாசம் மேலும் நீடிக்குமா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

    இதற்கிடையே தற்போது இவரின் அமைச்சர் பதவி நீடிக்குமா?என்னும் கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உயர்கல்வித்துறை
    திமுக
    சிறை
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உயர்கல்வித்துறை

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  தமிழக அரசு
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி ஆர்.என்.ரவி

    திமுக

    INDIA கூட்டணி கட்சிகளில் சேர்கிறாரா கமல்ஹாசன்? 2024 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக தமிழ்நாடு
    திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நாடாளுமன்றம்
    தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி  தயாநிதி மாறன்
    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    சென்னை

    சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய் கடற்படை
    மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி ஸ்டாலின்
    குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம்  அரசு மருத்துவமனை
    கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025