NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
    கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

    கொடநாடு வழக்கு: இபிஎஸ் ஜன.30, 31-ல் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 05, 2024
    05:43 pm

    செய்தி முன்னோட்டம்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜனவரி 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக, கடந்த 2019ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, மானநஷ்ட வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.

    card 2

    மாஸ்டர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம்

    இபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம்.

    அடுத்ததாக, பாதுகாப்பு காரணமாக, மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் வழங்க இயலாது எனவும், அதற்கு பதிலாக, தமது வீட்டில் இருந்தபடியே சாட்சியம் வழங்க வழிவகை செய்யவேண்டுமெனவும், அதை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் எடபாடியார், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தது மட்டுமின்றி, வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.

    card 3

    மேல்முறையீடு செய்த மேத்யூ சாமுவேல் 

    எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு, உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர், எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களிக்க வேண்டும் என கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை எனக்கூறினர்.

    இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தற்போது பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால், அது நிறைவடைந்த நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக, ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க உத்தரவிட்டுள்ளனர் அமர்வு நீதிபதிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெயலலிதா
    ஜெயலலிதா
    ஜெயலலிதா
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    ஜெயலலிதா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு எடப்பாடி கே பழனிசாமி
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்
    ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாஜக அண்ணாமலை
    வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம் அமெரிக்கா

    ஜெயலலிதா

    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு ஜெயலலிதா
    பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன்  பாஜக
    ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம்  ஜெயலலிதா

    ஜெயலலிதா

    பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள் அதிமுக
    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம் தமிழ்நாடு
    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: உரிமை கோரிய தீபா மற்றும் தீபக் மனு தள்ளுபடி  ஜெயலலிதா

    எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு அதிமுக
    சென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து அதிமுக
    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி தமிழக அரசு
    எடப்பாடியை அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு  அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025