NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்!
    மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்(படம்: News 18 Tamilnadu)

    மாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் ம.பி முதலமைச்சர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.

    அவரை வரவேற்க சென்ற சுற்றுலா அதிகாரிகளிடம் தனக்கு எந்த ஒரு சிறப்பு கவனிப்புகளும் வேண்டாம் என்று மறுத்த அவர், மக்களோடு மக்களாக மாமல்லபுரத்தை சுற்றி பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்.

    அவரின் இந்த எளிமை, இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருகிறது.

    கடந்த 2019ஆம் ஆண்டு சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர்.

    அந்த மாநாடு நடந்து முடிந்ததற்கு பின், மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில், கூகுள் CEO சுந்தர் பிச்சையும் தன் குடும்பத்தோடு மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்.

    02 Jan 2023

    "மக்களோடு மக்களாக சுற்றி பார்க்க விரும்புகிறேன்"

    ஆகவே முன்பு இருந்ததை விட மாமல்லபுரத்தின் பெருமை நாடெல்லாம் அதிகம் பரவி இருக்கிறது என்றே கூறலாம்.

    இதனால், பிற மாநிலத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    அந்த வரிசையில், சமீபத்தில் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க மத்திய பிரதேச பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தமிழகத்திற்கு வந்தார்.

    மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அப்போது அவர்களிடம் பேசிய ம.பி முதலமைச்சர், "எனக்காக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். நான் மக்களோடு மக்களாக சுற்றி பார்க்க விரும்புகிறேன்." என்று கூறி இருகிறார்.

    அவர் செய்த இந்த சின்ன செயல் தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    இந்தியா

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் ஒரு நட்சத்திரம்! உலகம்
    நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து! மோடி
    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை உலகம்
    இன்று முதல் மதர் டைரி பாலின் விலை ரூ.2 உயர்த்த முடிவு; நடப்பாண்டில் இது 5வது விலையேற்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025