NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை  திறப்பு
    மாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

    மாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் ஒவ்வொரு மாதமும் திறப்பது வழக்கம்.

    அதன்படி, மாசிமாத பூஜைக்காக வரும் 12ம்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படவுள்ளது.

    இதனை தொடர்ந்து மறுநாளான பிப்ரவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறவுள்ளது.

    இந்த 5 நாட்களுக்கு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல பூஜைகள் செய்யப்படும்,

    இதனை காண மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    கோயில் தேவஸ்தானம்

    காணிக்கையாக வந்த நாணயங்களை எண்ணும் பணியில் 540 பேர் கொண்ட குழு

    அதேபோல் சாமி தரிசனம் காண வரும் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    பக்தர்கள் வருகைக்கான முன்பதிவும் இன்று முதல் துவங்கியுள்ளது.

    சபரிமலை கோயிலின் 2022-23ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை காலம் கடந்தமாதம் 20ம்தேதி சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதன் மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ.380 கோடி வருமானம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் சன்னிதானத்தை சுற்றியுள்ள காணிக்கை பெட்டிகளில் இருக்கும் பணம் குறிப்பாக நாணையங்கள் இன்னமும் எண்ணப்படாமல் உள்ளது.

    இதனை எண்ணுவதற்கான பணியில் தேவஸ்தானம் சார்பில் 540ஊழியர்கள் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது.

    கிட்டத்தட்ட ரூ.18 கோடி வரை வரும் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025